திங்கள், 16 நவம்பர், 2015

புனித பிரான்ஸிஸ் சவேரியாரே....

 அன்புள்ள புனித
பிரான்ஸிஸ் சவேரியாரே....

என் அறைத் தோழரே...

தினமும் காலையில் நான் யாரை நினைத்து எழுந்தாலும்..

என் கண்முன் தெரிவது என்னவோ நீங்கள் தான்...

உம்மைப் பார்த்து விடிந்தபொழுதுகள் எல்லாம்
உம் உருவம் மட்டும் தான் என் நெஞ்சில் நிலைத்து நிற்கிறது...

உமது விருதுவாக்கை தினமும் வாசிக்கிறேன்..

உம் சாந்தமுகத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறேன்..

உம் நெஞ்சில், நீர் தாங்கிக் கொண்டிருக்கும்
இயேசுவின் சிலுவைமரத்தைப் பார்க்கும் போதெல்லாம்
என் கண்களில் நீர் வழிகின்றது...

உலகம் முழுவதையும் நான் ஆதாயமாக்கிக் கொள்ள விரும்பவில்லை...

என் மனம் மட்டும், எனக்கு ஆதாயமாக இருந்தால் போதும்;...

அது படும் பாடு, நீர் அறிந்த ஒன்றே...

நான் அழும் வேளைகளில் எல்லாம்
ஏதோ, நீர் எனக்கு ஆறுதல் அளிக்க வருவது போல் தெரியும்..

என் இன்ப நேரங்களிலும் உம்மிடம்
நான் எதையாவது உலரிக் கொண்டிருப்பேன்...

என் புலம்பல்கள் அனைத்தையும், நீர்
அமைதியுடனும்...

சகித்துக்கொண்டும்...

பொறுத்துக் கொண்டும்...

கேட்பது எனக்கு ஆறுதலாக உள்ளது...

இந்த நாட்களில் எனக்கு உற்றதுணையாக இருக்கும் நீரே
என் காவல் தூதர்...


கருத்துகள் இல்லை: