பரபரப்பான இந்த உலகில் மனிதர்களுக்கு நன்றி கூறுவதற்குக் கூட நேரம் இல்லை போல...
நேற்று தான், இப்படி ஒரு நாள் கொண்டாடப்படுவதே எனக்குத் தெரியும்.
நேற்று, நவம்பர் 26 ஆம் நாள், நன்றி கூறும் நாளாகக் கொண்டாடப்பட்டது.(Thanksgiving day).
இந்த நாளை எண்ணிப் பார்க்கும் போது, நான், மூவருக்கு இந்தத் தருணத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
முதலாவது என் ஆசான்... என் நண்பன்... என் எல்லாம்... என்று இருந்து, இன்று என்னோடு இல்லாத என் அருமைத் தோழன் இனியன். எனக்கு இந்த உலக விசயங்களை அறிமுகப்படுத்தி வைத்தது, என்னை வார்த்தெடுத்தது அனைத்தும் அவன் தான். எப்படிப் பேச வேண்டும்.... எப்படிப் பழக வேண்டும்..... எப்படி நடக்க வேண்டும்... இப்படி அனைத்தையும் கற்றுக் கொடுத்தவன். இந்த நாளில் அவனைச் சிறப்பாக நினைவு கூர்ந்தேன்.
இரண்டாவது என் மம்மி. மன்னிக்கவும். என் அம்மா. என் அம்மையை, அம்மா என்று அழைத்ததை விட மம்மி என்று அழைத்ததே அதிகம். மம்மி என்று அழைப்பதில் ஒரு நெருக்கத்தை உணர்கிறேன்.
சிறு வயதில் என் அம்மாவிடம் அதிகமாக அடி வாங்கியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே நன்றாகச் சமைப்பேன் என்று என் அம்மா கூறுவார். இப்போது தான் எந்த வேலையும் செய்வதில்லையே!!! அதனால், இப்போது நன்றாகச் சமைப்பதென்பது கடினம். நான், முதல் முதலாக என் குடும்பத்தைப் பிரிந்தது, கல்லூரிக்குச் சென்ற பிறகு தான். விடுதியில் தங்கிப் படித்தேன். அடிக்கடி அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்க்க வருவார்கள்.
முதல் முதலாக நான் என் அம்மாவிடம் மனம் விட்டுப் பேசியது, கல்லூரியில் பயிலும் போது தான். என் நண்பன் என்னிடம் பேசவில்லை என்று அவரிடம் கூறி அழுதேன். அன்று என் கண்ணீருக்கு ஆறுதலாக, என் தாய் மடி தான் இருந்தது.
விடுமுறையில் வீட்டிற்கு வரும்போதெல்லாம், தவறாமல் என்னை கடைக்கு அழைத்துச் சென்று, தேவையான அனைத்தையும் வாங்கித்தருவார். வாங்கித் தந்ததால் மட்டும் நன்றி கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். வாங்கித் தரும் போது, அவர் முகத்தில் நான் கண்ட அந்த மகிழ்ச்சி என்னை ஆச்சரியப்பட வைக்கும்.
படித்து சில வருடங்கள் கழித்து, மறுபடியும் இப்போது என் பெற்றோருடன் இருக்கும் இந்நேரத்தில் என் அம்மாவின் பாசத்தை அளவிட முடியவில்லை.
உடல் நிலை சரியில்லாத போது என் அருகில் படுத்துக் கொண்டு எனக்கு ஆறுதல் சொல்வது...
மதிய உணவு பேக் செய்வது...
நான் அணியும் மிதியணிகளை எடுத்து வைப்பது...
என்னை வழியனுப்பி வைப்பது...
நான் கேட்காமலே என் தேவைகளை நிறைவேற்றுவது...
எனக்காக பலரின் அவப்பேச்சுகளுக்கு ஆளாவது..
எனக்கேத் தெரியாமல் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது...
இந்த நேரத்தில் எனக்கு அம்மை வந்த நேரத்தை எண்ணிப் பார்க்கிறேன். என்னால் எழுந்து அமர கூட முடியாத அந்த நேரங்கள்.. என் மம்மி இல்லை என்றால் நான் எப்படி இருந்திருப்பேன் என்று நினைக்கும் போது, கண்களில் நீர் வழிகின்றது.
இப்படி எனக்காக, இத்தனை தியாகங்கள் செய்த என் அம்மாவிற்கு நன்றி கூறுவதில் எனக்கு மிகுந்த சந்தோசம். என் அம்மாவிற்கு வாழ்த்து கூறினேன்.
மூன்றாவது என் டாடி. என் மம்மி எனக்கு எந்த அளவிற்கோ, அந்த அளவிற்கு என் டாடியும் மறைமுகமாக என் அனைத்து இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்திருக்கிறார். அவருக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்.
இந்த மூவரும் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதவர்கள்.
நான் இப்போது இருப்பதற்குக் காரணமே இந்த மூவரும் தான்.
இவர்களுக்கு நன்றி கூறும் இந்நாளில், என் நண்பர்கள், என் உறவினர்கள் அனைவருக்கும் என் நன்றியைக் கூற ஆசைப்படுகிறேன்.
நாம் ஒவ்வொருவரும், ஏதாவது ஒருவகையில், ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன்பட்டவர்களே!!!
நேற்று தான், இப்படி ஒரு நாள் கொண்டாடப்படுவதே எனக்குத் தெரியும்.
நேற்று, நவம்பர் 26 ஆம் நாள், நன்றி கூறும் நாளாகக் கொண்டாடப்பட்டது.(Thanksgiving day).
இந்த நாளை எண்ணிப் பார்க்கும் போது, நான், மூவருக்கு இந்தத் தருணத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
முதலாவது என் ஆசான்... என் நண்பன்... என் எல்லாம்... என்று இருந்து, இன்று என்னோடு இல்லாத என் அருமைத் தோழன் இனியன். எனக்கு இந்த உலக விசயங்களை அறிமுகப்படுத்தி வைத்தது, என்னை வார்த்தெடுத்தது அனைத்தும் அவன் தான். எப்படிப் பேச வேண்டும்.... எப்படிப் பழக வேண்டும்..... எப்படி நடக்க வேண்டும்... இப்படி அனைத்தையும் கற்றுக் கொடுத்தவன். இந்த நாளில் அவனைச் சிறப்பாக நினைவு கூர்ந்தேன்.
இரண்டாவது என் மம்மி. மன்னிக்கவும். என் அம்மா. என் அம்மையை, அம்மா என்று அழைத்ததை விட மம்மி என்று அழைத்ததே அதிகம். மம்மி என்று அழைப்பதில் ஒரு நெருக்கத்தை உணர்கிறேன்.
சிறு வயதில் என் அம்மாவிடம் அதிகமாக அடி வாங்கியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே நன்றாகச் சமைப்பேன் என்று என் அம்மா கூறுவார். இப்போது தான் எந்த வேலையும் செய்வதில்லையே!!! அதனால், இப்போது நன்றாகச் சமைப்பதென்பது கடினம். நான், முதல் முதலாக என் குடும்பத்தைப் பிரிந்தது, கல்லூரிக்குச் சென்ற பிறகு தான். விடுதியில் தங்கிப் படித்தேன். அடிக்கடி அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்க்க வருவார்கள்.
முதல் முதலாக நான் என் அம்மாவிடம் மனம் விட்டுப் பேசியது, கல்லூரியில் பயிலும் போது தான். என் நண்பன் என்னிடம் பேசவில்லை என்று அவரிடம் கூறி அழுதேன். அன்று என் கண்ணீருக்கு ஆறுதலாக, என் தாய் மடி தான் இருந்தது.
விடுமுறையில் வீட்டிற்கு வரும்போதெல்லாம், தவறாமல் என்னை கடைக்கு அழைத்துச் சென்று, தேவையான அனைத்தையும் வாங்கித்தருவார். வாங்கித் தந்ததால் மட்டும் நன்றி கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். வாங்கித் தரும் போது, அவர் முகத்தில் நான் கண்ட அந்த மகிழ்ச்சி என்னை ஆச்சரியப்பட வைக்கும்.
படித்து சில வருடங்கள் கழித்து, மறுபடியும் இப்போது என் பெற்றோருடன் இருக்கும் இந்நேரத்தில் என் அம்மாவின் பாசத்தை அளவிட முடியவில்லை.
உடல் நிலை சரியில்லாத போது என் அருகில் படுத்துக் கொண்டு எனக்கு ஆறுதல் சொல்வது...
மதிய உணவு பேக் செய்வது...
நான் அணியும் மிதியணிகளை எடுத்து வைப்பது...
என்னை வழியனுப்பி வைப்பது...
நான் கேட்காமலே என் தேவைகளை நிறைவேற்றுவது...
எனக்காக பலரின் அவப்பேச்சுகளுக்கு ஆளாவது..
எனக்கேத் தெரியாமல் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது...
இந்த நேரத்தில் எனக்கு அம்மை வந்த நேரத்தை எண்ணிப் பார்க்கிறேன். என்னால் எழுந்து அமர கூட முடியாத அந்த நேரங்கள்.. என் மம்மி இல்லை என்றால் நான் எப்படி இருந்திருப்பேன் என்று நினைக்கும் போது, கண்களில் நீர் வழிகின்றது.
இப்படி எனக்காக, இத்தனை தியாகங்கள் செய்த என் அம்மாவிற்கு நன்றி கூறுவதில் எனக்கு மிகுந்த சந்தோசம். என் அம்மாவிற்கு வாழ்த்து கூறினேன்.
மூன்றாவது என் டாடி. என் மம்மி எனக்கு எந்த அளவிற்கோ, அந்த அளவிற்கு என் டாடியும் மறைமுகமாக என் அனைத்து இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்திருக்கிறார். அவருக்கும் என் உளங்கனிந்த நன்றிகள்.
இந்த மூவரும் என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதவர்கள்.
நான் இப்போது இருப்பதற்குக் காரணமே இந்த மூவரும் தான்.
இவர்களுக்கு நன்றி கூறும் இந்நாளில், என் நண்பர்கள், என் உறவினர்கள் அனைவருக்கும் என் நன்றியைக் கூற ஆசைப்படுகிறேன்.
நாம் ஒவ்வொருவரும், ஏதாவது ஒருவகையில், ஒவ்வொருவருக்கும் நன்றிக்கடன்பட்டவர்களே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக