
ஏமாற்றத்திற்குக் காரணம் அறியாமையா?
அல்லது நாம் நம்பினர்வர்கள் மேல் வைத்த அன்பா?
பெரும்பாலான நேரங்களில், இரண்டாவது சொன்னது தான் காரணமாக இருக்கும்.
நமக்கு, மிக நெருங்கிய நண்பராக பல வருடங்கள் இருப்பார். ஆனால், ஏதோ ஒரு மனஸ்தாபத்தினால் தன் நண்பனைப் பற்றியே, மற்றவர்களிடம் தரக்குறைவாகப் பேசுவான்.உடன் பிறந்தவர்கள் கூட, சில நேரங்களில், சில சந்தர்ப்பங்களால் இப்படி ஏமாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
வேலை செய்யும் இடத்தில் தொடங்கி...
நாம் காய்கறி வாங்கும் கடை...
பால் வாங்கும் இடம்...
ஆடைகள் வாங்கும் கடை...
உணவுப் பொருட்கள் விற்கும் கடை...
நகைக்கடை...
டீக்கடை...
பெட்டிக்கடை...
என எங்கும்
மலிந்து விட்டது, இந்த ஏமாற்றம் 'ஒன்று தான்'.
நாம், மற்றவரை ஏமாற்றும் போது, அது தெரிந்து செய்தாலும், இல்லை அறியாமல் செய்தாலும், நம் மேல் தவறு இல்லாதது போல் தான் தெரியும். இதுவே மற்றவரால் நாம் ஏமாற்றப்படும் போது தான், அதன் வலி தெரியும்.
ஏமாற்றம் இரண்டு வகைப்படும்.
ஒன்று: நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது
நமக்குக் கிடைக்காத ஒன்று, என்றாவது ஒருநாள், நம்மைத் தேடி வரும் என்ற நம்பிக்கையில், தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் சமாதானம், முதல் வகையான ஏமாற்றம்.
இரண்டு : மற்றவரால் ஏமாற்றப்படுவது.
இதுவும் இரண்டு வகைப்படும். ஒன்று தெரிந்தே ஏமாற்றப்படுவது. இரண்டாவது தெரியாமல் ஏமாற்றப்படுவது.
நீ சாப்பிட்டால், உனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவேன், என்று அம்மா சொல்லுவார்கள். அது மழைக்காலம். வாங்கித்தர மாட்டார் என்று நமக்கும் தெரியும். இருந்தும் அவரின் சொல் கேட்டு சாப்பிடுவோம். இது தெரிந்து ஏமாற்றப்படுவது. இதனால் பெரிய தவறொன்றும் இல்லை.
இரண்டாவது...தெரியாமல் ஏமாற்றப்படுவது.
கடைக்குச் செல்கிறோம். இருநூறு ரூபாய்க்குப் பொருட்கள் வாங்குகிறோம். பணத்தைக் கொடுக்கும் போது, அதில் இரண்டு நூறு ரூபாய் தாள்களுக்குப் பதில் மூன்று தாள்கள் இருந்திருக்கிறது. அதை நாம் கவனிக்காமல் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டோம். ஆனால், அவர் அதைப் பார்த்தும் நம்மை ஏமாற்றும் நோக்குடன், அதைத் தன் காசுப்பெட்டியில் போட்டுக் கொண்டாரென்றால்.. அது தான் நமக்கேத் தெரியாமல் நம்மை ஏமாற்றுவது.
இந்த ஏமாற்றம் நாம் செய்யும் போது நன்றாய்த் தான் இருக்கும்.
நமக்கும் அந்த நிலைமை வரும் போது தான் அதன் வலியை உணருவோம்.
ஆதலால்.. பிறரை மனதளவில் கூட ஏமாற்ற நினைக்காதீர்கள்.
ஒரு பிடி அளவே உள்ள இந்தச் சிறிய இதயம் எவ்வளவு துன்பங்களைத் தான் தாங்கும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக