நம் அம்மா நம்மிடம் நன்றாய்த் தான் பேசிக் கொண்டிருப்பார்.
திடீரென்று ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு பெரிய சண்டையில் போய் முடியும்.
"எனக்குத் தொல்லைக் கொடுக்காமல், போய்த்தொலைந்தால் கூட, இரண்டு நாட்கள் அழுதுவிட்டு, நான் சந்தோஷமாக இருப்பேன்" என்று சொல்லுமளவுக்குக் கூட சண்டை வரலாம்.
அப்போது 'இந்த உலகில் என்னை அன்பு செய்ய யாருமில்லை. பெற்ற தாயே இப்படிப் பேசுகிறார் என்றால், மற்றவர் பேசுவதில் தவறொன்றுமில்லை' என்றெல்லாம் நம் மனதில், வீணான எண்ணங்கள் தோன்றும்.
அந்த நேரத்தில் தான் மனதில் உறுதி வேண்டும்.
கோபத்தில், யார் திட்டினாலும், அதைப் பொருட்படுத்திக் கொள்ளக் கூடாது.
அது அவர்களின் இயலாமையேத் தவிர, உண்மையாக நம்மைத் திட்டவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்காது.
சில சமயம் நான் செய்வதுண்டு...
என் அம்மா என்னைஅடித்துவிடுவார்.
அவரைத் திரும்ப அடிக்க முடியாது.
அதனால், என்னை நானே மேலும் காயப்படுத்திக் கொள்வேன்.
என் கோபத்தை என்மீதே காட்டிக் கொள்கிறேன்.
இது தவறான செயல். எதற்காக நான் அடிக்கப்பட்டேன் என்பதை உணர்ந்து, நான் என்னைத் திருத்திக் கொண்டால், என்னை அடிக்க வேண்டிய அவசியம் என் அம்மாவிற்கும் இல்லை.
கோபப்பட்டு, என்னைக் காயப்படுத்திக் கொள்ள வேண்டியஅவசியம் எனக்கும் இல்லை.
கோபத்தில் அடி வாங்குவது கூட நல்லது.
ஆனால், அவர்களின் பேச்சு தான் நம்மை மிகவும் காயப்படுத்தும், வள்ளுவர் சொன்னது போல..
'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு'
காயப்படுத்துவது எளிது.
ஆனால், அதை ஆற்றுவது மிகக் கடினம்.
"நாம் சொல்வது அனைத்திற்கும் தலைஆட்டுகிறார் என்பதற்காக, ஒருவரின் மேல், நம் கோபம் அனைத்தையும் காட்டுவது மிகவும் தவறான செயல்."
கோபம் வரும் போது, நம் வாயிலிருந்து என்னென்ன சொற்கள் வருகின்றன என்று நமக்கேத் தெரியாது.
ஆனால், கோபம் குறைந்த பின், யோசித்துப் பார்த்தால், நம் மீது தான் தவறு இருக்கும்.
ஆனால், காயப்பட்டவர் நிலைமை அதே தான்.
அவர் காயத்தை எப்படி ஆற்றுவது?
ஒரு மன்னிப்பில் எல்லாம் முடிந்துவிடுமா?
இப்படி நம் மத்தியில் நிறைய கோபக்காரிகளும், கோபக்காரன்களும் இருக்கத்தான் செய்கிறோம்.
ஒருவரின் மேல் கோபப்படுவதற்கு முன், சில நொடிகளாவது சிந்திப்போம்.
அந்த நிலையில் நம்மை வைத்துப் பார்ப்போம்.
பெரும்பாலும், மேலானவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்கள் மீதே, தங்கள் கோபத்தைக் காட்டுவார்கள்.
இது என்ன சமூக நியதியா?
அநியாயமாய்த் தோன்றாதா இந்த மேலானவர்களுக்கு?
'மேலானவர் - கீழுள்ளவர்' என் நண்பன் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள்.
மேலானவர்கள், தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.
அவர்களைப் பகடைக்காய்களாக உபயோகிப்பதை நிறுத்திவிட்டு,
அவர்களும் மனிதர்கள்...
அவர்களுக்கும் கோபம் வரும்...
என்பதை நினைத்து...
நம் கோபத்தை மற்றவர் மீது காட்டுவதற்குமுன், சிந்தித்து செயல்படுவோம்.
கோபம் வரும் போது, நமக்குப் பிடித்தவரை(அல்லதுபிடித்தபெயரை), நினைத்துக் கொண்டால், குறைந்து விடும் என்று கூறுவார்கள்.
எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.
அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள்.
எனக்குப் பிடித்த ஒரு பெயர் உண்டு. அது, வெளியில் சொல்லமுடியாத பெயர். அதனால் மனதிற்குள் தான் சொல்லிக் கொள்வேன்.
கோபமில்லாத குணவதியாக வாழ,
முயற்சி செய்வோம்!
அன்பு வணக்கங்கள்!!!
இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது இரு மடங்காகப் பெருகும்.
திடீரென்று ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு பெரிய சண்டையில் போய் முடியும்.
"எனக்குத் தொல்லைக் கொடுக்காமல், போய்த்தொலைந்தால் கூட, இரண்டு நாட்கள் அழுதுவிட்டு, நான் சந்தோஷமாக இருப்பேன்" என்று சொல்லுமளவுக்குக் கூட சண்டை வரலாம்.
அப்போது 'இந்த உலகில் என்னை அன்பு செய்ய யாருமில்லை. பெற்ற தாயே இப்படிப் பேசுகிறார் என்றால், மற்றவர் பேசுவதில் தவறொன்றுமில்லை' என்றெல்லாம் நம் மனதில், வீணான எண்ணங்கள் தோன்றும்.
அந்த நேரத்தில் தான் மனதில் உறுதி வேண்டும்.
கோபத்தில், யார் திட்டினாலும், அதைப் பொருட்படுத்திக் கொள்ளக் கூடாது.
அது அவர்களின் இயலாமையேத் தவிர, உண்மையாக நம்மைத் திட்டவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்காது.
சில சமயம் நான் செய்வதுண்டு...
என் அம்மா என்னைஅடித்துவிடுவார்.
அவரைத் திரும்ப அடிக்க முடியாது.
அதனால், என்னை நானே மேலும் காயப்படுத்திக் கொள்வேன்.
என் கோபத்தை என்மீதே காட்டிக் கொள்கிறேன்.
இது தவறான செயல். எதற்காக நான் அடிக்கப்பட்டேன் என்பதை உணர்ந்து, நான் என்னைத் திருத்திக் கொண்டால், என்னை அடிக்க வேண்டிய அவசியம் என் அம்மாவிற்கும் இல்லை.
கோபப்பட்டு, என்னைக் காயப்படுத்திக் கொள்ள வேண்டியஅவசியம் எனக்கும் இல்லை.
கோபத்தில் அடி வாங்குவது கூட நல்லது.
ஆனால், அவர்களின் பேச்சு தான் நம்மை மிகவும் காயப்படுத்தும், வள்ளுவர் சொன்னது போல..
'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு'
காயப்படுத்துவது எளிது.
ஆனால், அதை ஆற்றுவது மிகக் கடினம்.
"நாம் சொல்வது அனைத்திற்கும் தலைஆட்டுகிறார் என்பதற்காக, ஒருவரின் மேல், நம் கோபம் அனைத்தையும் காட்டுவது மிகவும் தவறான செயல்."
கோபம் வரும் போது, நம் வாயிலிருந்து என்னென்ன சொற்கள் வருகின்றன என்று நமக்கேத் தெரியாது.
ஆனால், கோபம் குறைந்த பின், யோசித்துப் பார்த்தால், நம் மீது தான் தவறு இருக்கும்.
ஆனால், காயப்பட்டவர் நிலைமை அதே தான்.
அவர் காயத்தை எப்படி ஆற்றுவது?
ஒரு மன்னிப்பில் எல்லாம் முடிந்துவிடுமா?
இப்படி நம் மத்தியில் நிறைய கோபக்காரிகளும், கோபக்காரன்களும் இருக்கத்தான் செய்கிறோம்.
ஒருவரின் மேல் கோபப்படுவதற்கு முன், சில நொடிகளாவது சிந்திப்போம்.
அந்த நிலையில் நம்மை வைத்துப் பார்ப்போம்.
பெரும்பாலும், மேலானவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்கள் மீதே, தங்கள் கோபத்தைக் காட்டுவார்கள்.
இது என்ன சமூக நியதியா?
அநியாயமாய்த் தோன்றாதா இந்த மேலானவர்களுக்கு?
'மேலானவர் - கீழுள்ளவர்' என் நண்பன் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள்.
மேலானவர்கள், தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.
அவர்களைப் பகடைக்காய்களாக உபயோகிப்பதை நிறுத்திவிட்டு,
அவர்களும் மனிதர்கள்...
அவர்களுக்கும் கோபம் வரும்...
என்பதை நினைத்து...
நம் கோபத்தை மற்றவர் மீது காட்டுவதற்குமுன், சிந்தித்து செயல்படுவோம்.
கோபம் வரும் போது, நமக்குப் பிடித்தவரை(அல்லதுபிடித்தபெயரை), நினைத்துக் கொண்டால், குறைந்து விடும் என்று கூறுவார்கள்.
எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.
அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள்.
எனக்குப் பிடித்த ஒரு பெயர் உண்டு. அது, வெளியில் சொல்லமுடியாத பெயர். அதனால் மனதிற்குள் தான் சொல்லிக் கொள்வேன்.
கோபமில்லாத குணவதியாக வாழ,
முயற்சி செய்வோம்!
அன்பு வணக்கங்கள்!!!
இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அது இரு மடங்காகப் பெருகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக