புதன், 4 நவம்பர், 2015

பயம்...


சிலருக்குப் பேய் என்றால் பயம். ஒருசிலருக்குப் பேசுவதுஎன்றால் பயம். மற்றும் சிலருக்குப் பாடுவதுபயம். சிலர் கூட்டத்தைக் கண்டால் பயப்படுவர். இப்படிபயமும் பலவகை. பயப்படுபவர்களையும் நாம் வகைப்படுத்தலாம். இன்றுசிலவயதானவர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்புகிடைத்தது. என்னதான் நம் வயதொத்தவர்களுடன் இருக்கும் போதுஅரட்டை, பேச்சு என்று போனாலும் வயதானவர்களுடன் பேசும் போது அவர்கள் அனுபவங்களையும், வாழ்க்கைத் தத்துவத்தையும் புரிந்துகொள்ள ஒருவாய்ப்பாக இருக்கிறது.
அந்தப் பாட்டி,ஒருகிராமத்திலிருந்து வேலைக்குச் செல்பவர். தனது மூத்தமகளின் இரண்டு பெண் குழந்தைகளையும், தன்னுடன் வைத்துவளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் ஊரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். திட_ரென தனது தெருவில் நடப்பவற்றைப் பற்றிச் சொன்னார். நானும் என் மூன்று பெண் பிள்ளைகளையும், இதேஊரில் தான் வளர்த்துதிருமணம் செய்துவைத்தேன். அன்றெல்லாம் பத்துமணிக்குக் கூட வெளியில் பயமில்லாமல் கடைக்குச் சென்றுவருவார்கள் என் பிள்ளைகள். அப்படித் தான் என் பிள்ளைகளைவளர்த்தேன். இன்றுஎன் பேரப்பிள்ளைகளைவெளியில் அனுப்பவதற்குஅவ்வளவுபயமாக இருக்கிறது. தெருவில் அப்படிஒருஅயோக்கியத்தனம் பெருகிவிட்டதுஎன்றுத் தன் ஆதங்கத்தைஎன்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் அவர் கூறியஒருசொற்றொடர் தான் இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 'அந்தக் காலத்தில் பேயைக் கண்டுபயப்படுவார்கள். இந்தக் காலத்தில் மனிதனைக் கண்டுபயப்படவேண்டியநிலைமைவந்துவிட்டது'என்றுஅவர் கூறியஒரே ஒருசொற்றொடர் தான். ஆனால் எவ்வளவுபெரியவிசயத்தைதன்னுள் அடக்கியுள்ளவார்த்தை.
அந்தக் காலத்தில் பேய் என்றஒன்றைநினைத்துப் பயந்தமனித இனம்.. இன்று...மனிதனைக் கண்டேபயப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன?
இதைப்பற்றிஎழுதஆரம்பித்தால் ஒருபுத்தகமேஎழுதிமுடித்துவிடலாம். பேசஅவ்வளவு இருக்கிறது. பேசுவோம்.இன்றுநான் மனிதனாகமற்றவரிடம் நடந்துகொள்கிறேனா? மற்றவரையும் என்னைப் போல் நினைக்கிறேனாஎன்றசிந்தனையைமட்டும் நம் மனதிற்குள் எடுத்துயோசிப்போம்.
இனிய இரவுவணக்கம்.

கருத்துகள் இல்லை: