நான் சிறு வயதாய் இருந்தபோது, அதாவது இரண்டாம் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டின் அருகில் நிறைய சிறு பிள்ளைகள் இருப்பார்கள். சனி ஞாயிறு என்றால் ஒரே ஆட்டம், பாட்டம் தான். தெருவே திருவிழா போலக் காட்சியளிக்கும். என் சிறுவயது நண்பர்கள் தேவி,பிரபு, ராஜி இன்னும் பலர்.
நாங்கள் பெரும்பாலும் விளையாடும் விளையாட்டு,ஓடிப்பிடித்து இல்லையைன்றால் ஒளிந்து விளையாடுவது.
சிலநேரம் சைக்கிள் வாடகைக்கு எடுத்து, அதை ஓட்டிப் பழகி விளையாடுவோம்.
சிலநேரம் வீட்டிற்குத் தெரியாமல், சமையல் பொருட்களைத் திருடிக்கொண்டு வந்து தேங்காய் சரட்டையில் சமையல் செய்து உண்டு மகிழ்ந்து விளையாடுவோம்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து, குளித்துவிட்டு ஆலயத்திற்குச் செல்வது வழக்கம்.
வீட்டில் உட்கார்ந்து படித்த ஞாபகமும் இல்லை.
படிக்காமல் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் இல்லை.
எங்கள் தெருவில், துணிசலவை செய்யும் ஒரு தாத்தா இருப்பார். அவர், ஒரு குட்டி தள்ளுவண்டி வைத்திருப்பார். அதன் பக்கத்தில் செங்கல்களால் ஒரு வீடு கட்டி, அதற்குள் சில சாமி படங்களை வைத்து, அதற்கு சூடம் ஏற்றிக் கும்பிட்ட ஞாபகம் எல்லாம் இருக்கிறது.
அப்போது நான் என்ன ஜாதி என்று தெரியாது.
யாரிடம் மட்டும் பேசவேண்டுமென்று தெரியாது.
யார் வீட்டிற்கெல்லாம் செல்லக் கூடாது என்பது தெரியாது.
தெரு மட்டுமே எங்கள் சொத்து...
எந்நேரமும் தெருவில் தான் கிடப்போம்.
மதியவேளைத் தூக்கம் கூட அறிந்தது கிடையாது.
அந்த நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது, மனதிற்குள் ஒரு உற்சாகம் பிறந்தது.
நான் சைக்கிள் ஓட்டப் பழகியது அந்தத் தெருவில் தான்...
நான் ஓடியாடப் பழகியதும் அந்தத் தெருவில் தான்...
அழகான நண்பர்களைப் பெற்றதும் அந்தத் தெருவில் தான்...
அந்த நாட்கள் திரும்ப வராதா என்று ஏக்கமாய் இருக்கிறது.
கடந்த காலம் எப்போதும் திரும்ப வராது. ஆனால், கடந்த காலத்தைப் போல் நம்மால் வாழ முடியும்.
எதைப் பற்றியும் நினைக்காமல் மகிழ்ச்சியாய், அமைதியாய், பொறாமை இல்லாமல், சண்டைசச்சரவுகள் இல்லாமல், போட்டி, பகை இல்லாமல் நம்மால் வாழ முடியும்.
அப்படி வாழும் போது, நிகழ்காலமும் கடந்த காலத்தைப் போல் மகிழ்ச்சியானதாய் அமையும்.
நாங்கள் பெரும்பாலும் விளையாடும் விளையாட்டு,ஓடிப்பிடித்து இல்லையைன்றால் ஒளிந்து விளையாடுவது.
சிலநேரம் சைக்கிள் வாடகைக்கு எடுத்து, அதை ஓட்டிப் பழகி விளையாடுவோம்.
சிலநேரம் வீட்டிற்குத் தெரியாமல், சமையல் பொருட்களைத் திருடிக்கொண்டு வந்து தேங்காய் சரட்டையில் சமையல் செய்து உண்டு மகிழ்ந்து விளையாடுவோம்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே, காலையில் 5 மணிக்கெல்லாம் எழுந்து, குளித்துவிட்டு ஆலயத்திற்குச் செல்வது வழக்கம்.
வீட்டில் உட்கார்ந்து படித்த ஞாபகமும் இல்லை.
படிக்காமல் ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் இல்லை.
எங்கள் தெருவில், துணிசலவை செய்யும் ஒரு தாத்தா இருப்பார். அவர், ஒரு குட்டி தள்ளுவண்டி வைத்திருப்பார். அதன் பக்கத்தில் செங்கல்களால் ஒரு வீடு கட்டி, அதற்குள் சில சாமி படங்களை வைத்து, அதற்கு சூடம் ஏற்றிக் கும்பிட்ட ஞாபகம் எல்லாம் இருக்கிறது.
அப்போது நான் என்ன ஜாதி என்று தெரியாது.
யாரிடம் மட்டும் பேசவேண்டுமென்று தெரியாது.
யார் வீட்டிற்கெல்லாம் செல்லக் கூடாது என்பது தெரியாது.
தெரு மட்டுமே எங்கள் சொத்து...
எந்நேரமும் தெருவில் தான் கிடப்போம்.
மதியவேளைத் தூக்கம் கூட அறிந்தது கிடையாது.
அந்த நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் போது, மனதிற்குள் ஒரு உற்சாகம் பிறந்தது.
நான் சைக்கிள் ஓட்டப் பழகியது அந்தத் தெருவில் தான்...
நான் ஓடியாடப் பழகியதும் அந்தத் தெருவில் தான்...
அழகான நண்பர்களைப் பெற்றதும் அந்தத் தெருவில் தான்...
அந்த நாட்கள் திரும்ப வராதா என்று ஏக்கமாய் இருக்கிறது.
கடந்த காலம் எப்போதும் திரும்ப வராது. ஆனால், கடந்த காலத்தைப் போல் நம்மால் வாழ முடியும்.
எதைப் பற்றியும் நினைக்காமல் மகிழ்ச்சியாய், அமைதியாய், பொறாமை இல்லாமல், சண்டைசச்சரவுகள் இல்லாமல், போட்டி, பகை இல்லாமல் நம்மால் வாழ முடியும்.
அப்படி வாழும் போது, நிகழ்காலமும் கடந்த காலத்தைப் போல் மகிழ்ச்சியானதாய் அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக