நேற்றைய தினம் மற்ற நாட்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது.
எங்கள் சர்ச்சில் இருந்து, ஐந்து இளைஞர்கள், உத்தமபாளையத்தில் இருக்கும் சர்ச்சுக்கு 'தலைமைத்துவப் பண்பு' பற்றிய பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்தோம், எங்கள் ஃபாதருடன்.
நாள் முழுவதுமே நன்றாகச் சென்றது.
30 இளைஞர்கள் பங்கேற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நேற்று நடந்தவற்றில், எனக்குப் பிடித்த சில விசயங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
எனக்குப் பிடித்த அழகான பாடலுடன்(தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீதானய்யா) பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
'தன்னைப் பற்றிய அறிமுகத்துடன்' பயிற்சியை ஆரம்பித்தார், மதுரை ஞானஒளிவுபுரத்திலிருந்து வந்திருந்த திரு.விஜய் அவர்கள்.
தலைவன் என்றால் யார் என்பதற்கு, பொது வாழ்க்கையில் மூவரை(சே குவேரா, அப்துல்கலாம் மற்றும் காந்தியடிகள்) எடுத்துக் காட்டாய் கூறினார்.
மதவாழ்க்கையிலும், நால்வரைப்(தூய பேதுரு, இயேசு, போப் மற்றும் மோசே) பற்றிக் கூறினார்.
நல்ல உரையாடல் நடந்தது.
தலைவன் என்பவன் மக்களை எவ்வாறெல்லாம் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும், அவனுடைய நடத்தை, பண்பாடு, ஒழுக்கம் குறித்தும் விளக்கினார்.
நம்மை நாமே எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும்?
இடையிடையே கதைகளும் கூறினார்.
நம்முள் நேர்மறை எண்ணங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்;
எதிர்மறை எண்ணங்கள் உண்டாகாமல் எவ்வாறு நம்மை மெழுகேற்றிக் கொள்வது என்பதை, நகைச்சுவை கலந்த குரலில் அனைத்தையும் அழகாக எடுத்துரைத்தார்.
'வளர வேண்டும் என முடிவு செய்துவிட்டால்
வாய்ப்புக்களை நீ தான் தேட வேண்டும்'
ஒரு மனிதனின் வலிமைகள், இயலும் தன்மைகள் பற்றி சிந்தித்தோம்.
ஆறு வகைகளாக அதைப் பிரித்திருந்தனர்.
அதில் கடைசியாகச் சொன்ன, சமுதாய வலிமையில் அவர் கூறிய ஒரு சொற்றொடர் அனைவரையும் சிந்திக்க வைத்தது.... 'யாருக்கு நாம் தேவையோ அவர்கள் நமக்கும் தேவை'.
'நான் யார்?' என்ற தலைப்பின் கீழ் 'உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்......'பாடலைக் கேட்டோம். அதில் அவர் கூறிய ஒரு கருத்து மிகவும் பிடித்திருந்தது.
'ஊரில் இருப்பவர்கள் மேல் பார்வை
உடன் இருப்பவர்கள் மேல் இருப்பதில்லை'
சிறந்த எடுத்துக்காட்டுகள் கொடுத்தார்.
எத்தனையோ நடிகர் நடிகைகளைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறோம்.
ஆனால், தன் பெற்றோர், தன் உடன்பிறந்தோர், தன் அன்புக்குரியவர், தன் நண்பர் எனத் தன் உடன் இருப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறோமா என்றால் பல நேரங்களில் இல்லை என்ற பதிலே வரும்.
நம் அருகில் இருப்பவர் தானே.. இவரைப்பற்றி என்ன தெரிந்து கொள்வது என்ற எண்ணமா?
இல்லை...
உடன் இருக்கும் போது, அவர்கள் அருமை தெரிவதில்லையா? என்பது புரியவில்லை.
யாருக்குமே ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. ஆனால், அது இல்லாத போது அவர்கள் மனம் படும் பாடு அவர்கள் மட்டும் அறிந்ததே...
என் தோழி,அவள் கணவர் அருகில் இருக்கும் போது, எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள். ஆனால், அவள் கணவர் வேலை நிமித்தம் வெளியூர் சென்று விட்டார் என்றால் 'அவள் ஃபோன் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் தான்....'.நான் கேட்பேன் அவளிடம் 'ஏன்டி பக்கத்தில் இருக்கும் போது, எப்ப பாரு சண்டை போட்டுட்டு இருக்க! ஊருக்குப் போனதும் எங்க இருந்து வந்துச்சுடி இந்தப்பாசம்? என்று'.
ஆகையால், எல்லாருமே ஒருவர் இல்லாத போது தான் அவரின் அருமையை உணர்கிறார்கள். பிடித்திருந்த செய்தி இது.
SWOT Analysis (Strength, Weakness, Opportunities, Threats) –ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாய் அழகாய் விளக்கினார் பயிற்சியாளர்.
'படிப்பிற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை'- புதிதாய்த் தெரிந்த வரி.
படித்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இந்த வரி சற்று சவாலாக இருந்தது.
"நம் வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும்; அந்த இலட்சியங்கள் பற்றியே இரவும் பகலும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்; "என்று சமூக அக்கறைகளைக் குறித்தும் விளக்கினார்.
உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல... மன ஊனம் இருக்கக் கூடாது.
ஒரு பிரச்சனை என்றால், அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
நல்ல தலைவன் என்பவன் அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்து, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவான் என்று கூறினார்.
உடல் மொழி குறித்து சில டிப்ஸ் கொடுத்தார்.
நன்றியுரையுடன் அன்றைய பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது.
பின் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இன்றைய நாளில், என் தோழியின் ஞாபகங்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.
ஏனென்றால், அவள் கூறிய நிறைய வார்த்தைகள், நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டவைகள் அனைத்தையும், இன்று கேட்டது போல் இருந்தது.
இன்றைய திருப்பலி ஒரு ஸ்பெஷலாக இருந்தது.
அன்றொரு நாள் என் தோழியுடன் நான் பங்கெடுத்த சிலுவைப்பாதைத் திருப்பலி போல் இன்றும் இருந்தது.
பாடல் பாடினேன்.
பக்தியில் நனைந்தேன்.
அனைவருக்காகவும் வேண்டினேன்.
மாலையில் வீடு திரும்பினேன்.
இன்றைய நாள் ஒரு அர்த்தமுள்ள நாளாகவே இருந்தது.
அதிசயமாக இன்று என் மம்மி 'இன்று என்ன சொல்லிக் கொடுத்தார்கள்?' என்று கேட்டார். நிறைய விசயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். திருப்தியாக இருந்தது.
அங்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். புதுவரவு. புதுவரவு என்றாலே நிறைய விமர்சனங்களும் வரத்தானே செய்யும். நல்லவற்றை எடுத்துக் கொள்வோம். தீயவற்றை விட்டுவிடுவோம்.
இப்போது...
நான் காயப்படுத்தியவர்களை, எண்ணிப்பார்த்து அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.
அருகில் இருக்கும் போது, நம் அன்பானவரின் அருமை தெரிவதில்லை.
அனுபவங்கள் பகிரப்படுவது பெருமிதத்திற்காக அல்ல....
அதில் ஏதாவது ஒரு வரி கூட படிப்பவரையோ கேட்பவரையோ பாதிக்காதா என்பதற்காகத் தான்..
என் கிறுக்கல்களையும் படித்து அதற்கு விமர்சனம் தரும் என் அன்புத் தோழிக்கு நன்றி!
இனிய காலை வணக்கங்கள்....
எங்கள் சர்ச்சில் இருந்து, ஐந்து இளைஞர்கள், உத்தமபாளையத்தில் இருக்கும் சர்ச்சுக்கு 'தலைமைத்துவப் பண்பு' பற்றிய பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்தோம், எங்கள் ஃபாதருடன்.
நாள் முழுவதுமே நன்றாகச் சென்றது.
30 இளைஞர்கள் பங்கேற்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
நேற்று நடந்தவற்றில், எனக்குப் பிடித்த சில விசயங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
எனக்குப் பிடித்த அழகான பாடலுடன்(தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீதானய்யா) பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
'தன்னைப் பற்றிய அறிமுகத்துடன்' பயிற்சியை ஆரம்பித்தார், மதுரை ஞானஒளிவுபுரத்திலிருந்து வந்திருந்த திரு.விஜய் அவர்கள்.
தலைவன் என்றால் யார் என்பதற்கு, பொது வாழ்க்கையில் மூவரை(சே குவேரா, அப்துல்கலாம் மற்றும் காந்தியடிகள்) எடுத்துக் காட்டாய் கூறினார்.
மதவாழ்க்கையிலும், நால்வரைப்(தூய பேதுரு, இயேசு, போப் மற்றும் மோசே) பற்றிக் கூறினார்.
நல்ல உரையாடல் நடந்தது.
தலைவன் என்பவன் மக்களை எவ்வாறெல்லாம் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றியும், அவனுடைய நடத்தை, பண்பாடு, ஒழுக்கம் குறித்தும் விளக்கினார்.
நம்மை நாமே எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும்?
- Self-motivated (External)
- Self-interest (Internal)
- Self-knowledge
- Self-talent
- Quality of life
மேற்சொன்ன ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கினார்.
குறும் படங்கள் மற்றம் சில திரைப்படப் பாடல்கள் பகிரப்பட்டன.இடையிடையே கதைகளும் கூறினார்.
நம்முள் நேர்மறை எண்ணங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம்;
எதிர்மறை எண்ணங்கள் உண்டாகாமல் எவ்வாறு நம்மை மெழுகேற்றிக் கொள்வது என்பதை, நகைச்சுவை கலந்த குரலில் அனைத்தையும் அழகாக எடுத்துரைத்தார்.
'வளர வேண்டும் என முடிவு செய்துவிட்டால்
வாய்ப்புக்களை நீ தான் தேட வேண்டும்'
ஒரு மனிதனின் வலிமைகள், இயலும் தன்மைகள் பற்றி சிந்தித்தோம்.
ஆறு வகைகளாக அதைப் பிரித்திருந்தனர்.
அதில் கடைசியாகச் சொன்ன, சமுதாய வலிமையில் அவர் கூறிய ஒரு சொற்றொடர் அனைவரையும் சிந்திக்க வைத்தது.... 'யாருக்கு நாம் தேவையோ அவர்கள் நமக்கும் தேவை'.
'நான் யார்?' என்ற தலைப்பின் கீழ் 'உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்......'பாடலைக் கேட்டோம். அதில் அவர் கூறிய ஒரு கருத்து மிகவும் பிடித்திருந்தது.
'ஊரில் இருப்பவர்கள் மேல் பார்வை
உடன் இருப்பவர்கள் மேல் இருப்பதில்லை'
சிறந்த எடுத்துக்காட்டுகள் கொடுத்தார்.
எத்தனையோ நடிகர் நடிகைகளைப் பற்றி அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறோம்.
ஆனால், தன் பெற்றோர், தன் உடன்பிறந்தோர், தன் அன்புக்குரியவர், தன் நண்பர் எனத் தன் உடன் இருப்பவர்களைப் பற்றித் தெரிந்து கொள்கிறோமா என்றால் பல நேரங்களில் இல்லை என்ற பதிலே வரும்.
நம் அருகில் இருப்பவர் தானே.. இவரைப்பற்றி என்ன தெரிந்து கொள்வது என்ற எண்ணமா?
இல்லை...
உடன் இருக்கும் போது, அவர்கள் அருமை தெரிவதில்லையா? என்பது புரியவில்லை.
யாருக்குமே ஒரு பொருள் இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. ஆனால், அது இல்லாத போது அவர்கள் மனம் படும் பாடு அவர்கள் மட்டும் அறிந்ததே...
என் தோழி,அவள் கணவர் அருகில் இருக்கும் போது, எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள். ஆனால், அவள் கணவர் வேலை நிமித்தம் வெளியூர் சென்று விட்டார் என்றால் 'அவள் ஃபோன் எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால் தான்....'.நான் கேட்பேன் அவளிடம் 'ஏன்டி பக்கத்தில் இருக்கும் போது, எப்ப பாரு சண்டை போட்டுட்டு இருக்க! ஊருக்குப் போனதும் எங்க இருந்து வந்துச்சுடி இந்தப்பாசம்? என்று'.
ஆகையால், எல்லாருமே ஒருவர் இல்லாத போது தான் அவரின் அருமையை உணர்கிறார்கள். பிடித்திருந்த செய்தி இது.
SWOT Analysis (Strength, Weakness, Opportunities, Threats) –ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாய் அழகாய் விளக்கினார் பயிற்சியாளர்.
'படிப்பிற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை'- புதிதாய்த் தெரிந்த வரி.
படித்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இந்த வரி சற்று சவாலாக இருந்தது.
"நம் வாழ்வில் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும்; அந்த இலட்சியங்கள் பற்றியே இரவும் பகலும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்; "என்று சமூக அக்கறைகளைக் குறித்தும் விளக்கினார்.
உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல... மன ஊனம் இருக்கக் கூடாது.
ஒரு பிரச்சனை என்றால், அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, அதைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
நல்ல தலைவன் என்பவன் அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்து, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிவான் என்று கூறினார்.
உடல் மொழி குறித்து சில டிப்ஸ் கொடுத்தார்.
நன்றியுரையுடன் அன்றைய பயிற்சி வகுப்பு இனிதே நிறைவுற்றது.
பின் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இன்றைய நாளில், என் தோழியின் ஞாபகங்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தது.
ஏனென்றால், அவள் கூறிய நிறைய வார்த்தைகள், நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டவைகள் அனைத்தையும், இன்று கேட்டது போல் இருந்தது.
இன்றைய திருப்பலி ஒரு ஸ்பெஷலாக இருந்தது.
அன்றொரு நாள் என் தோழியுடன் நான் பங்கெடுத்த சிலுவைப்பாதைத் திருப்பலி போல் இன்றும் இருந்தது.
பாடல் பாடினேன்.
பக்தியில் நனைந்தேன்.
அனைவருக்காகவும் வேண்டினேன்.
மாலையில் வீடு திரும்பினேன்.
இன்றைய நாள் ஒரு அர்த்தமுள்ள நாளாகவே இருந்தது.
அதிசயமாக இன்று என் மம்மி 'இன்று என்ன சொல்லிக் கொடுத்தார்கள்?' என்று கேட்டார். நிறைய விசயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். திருப்தியாக இருந்தது.
அங்கு நிறைய புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். புதுவரவு. புதுவரவு என்றாலே நிறைய விமர்சனங்களும் வரத்தானே செய்யும். நல்லவற்றை எடுத்துக் கொள்வோம். தீயவற்றை விட்டுவிடுவோம்.
இப்போது...
நான் காயப்படுத்தியவர்களை, எண்ணிப்பார்த்து அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.
அருகில் இருக்கும் போது, நம் அன்பானவரின் அருமை தெரிவதில்லை.
அனுபவங்கள் பகிரப்படுவது பெருமிதத்திற்காக அல்ல....
அதில் ஏதாவது ஒரு வரி கூட படிப்பவரையோ கேட்பவரையோ பாதிக்காதா என்பதற்காகத் தான்..
என் கிறுக்கல்களையும் படித்து அதற்கு விமர்சனம் தரும் என் அன்புத் தோழிக்கு நன்றி!
இனிய காலை வணக்கங்கள்....