வெள்ளி, 29 மே, 2020

உன் பொறுப்பு...

நீ மகிழ்ச்சியாகவோ

துக்கமாகவோ

சோர்வாகவோ

நம்பிக்கையுடனோ

இருப்பது உன் கையில் தான் உள்ளது....

உன் வேலைகளை ஒருபோதும் தள்ளிப் போடாதே...

நாளை முடிக்க வேண்டிய வேலை என்றால்
நேற்று முன்தினமே முடித்திருக்க வேண்டும்....

இப்படி வேலை செய்வது மிகவும் கடினம் தான்...

ஆனால்... ஒரு முறை முயற்சித்துப் பார்... 
உன் வாழ்வில் பல வெற்றிகள் குவியும்...

சோர்வோ கலக்கமோ வர வாய்ப்பில்லை....

இனியபாரதி.