சனி, 2 ஜூன், 2018

சண்டையிட்டுக் கொள்ளும் அவள்...

எப்போதும் பேசிக் கொண்டே இருப்பாள்...
நிறுத்தச் சொன்னாலும் கேட்பதில்லை...

விரைவாக அவள் கூற விரும்புவதைச் சொல்லி விடுவாள்....

அதன் பிறகும் அவள் தான் பேசுவாள்...

நீ என்ன செய்தாய் என்று கேட்பாள்...

ஆனால் நான் சொல்வதைக் கேட்காமல்
அவள் விருப்பத்தின்படி தான் பேசுவாள்...

கடைசியில் நீ ஒன்றும் பேசவில்லை என்று கோபப்படுவாள்...

அவளாக அழைப்பைத் துண்டிப்பாள்...

அவளாக மீண்டும் அழைப்பாள்...

கடைசியில்...
சண்டை என்று சொல்லி மூன்று நாட்கள் பேசமாட்டாள்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: