செவ்வாய், 17 மார்ச், 2020

காப்பேன் என்று...

அவள் கொடுத்த தைரியத்தால்
என்னால் எல்லாம் முடியும் என்று சொல்லி முயன்றேன்...

என்னை மூழ்கடிக்க அவளே
காத்திருப்பாள் என்பதை
நான் கனவில் கூட நினைக்கவில்லை...

அவள் என்னைக் காக்கும் கடவுளாக வர வேண்டாம்...
என்னைக் கைபிடித்து அழைத்துச் செல்லவும் வேண்டாம்...
என் வழியில் உள்ள பூக்களை நான் உணர விடாமல்
தடுக்காமல் இருந்தால் சரி..


இனியபாரதி. 


1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

வாழ்வில் நம்பிக்கை இருக்க வேண்டும் யாரையும் நம்பிதான் இருக்க கூடாது