அயலான் மீதும் என்னால்
உண்மையான அன்பு காட்ட முடிகிறதா?
ஆம் என்று பதில் வந்தால் அது கருணை...
பகைவருக்கும் உதவும் பக்குவம் இருக்கிறதா?
ஆம் என்று பதில் வந்தால் அது கருணை...
நோயுற்றவரைப் பார்த்துக் கொள்ளும்
பொறுமை இருக்கிறதா?
ஆம் என்று பதில் வந்தால் அது கருணை...
செல்வத்திலும் மற்றவரின் வறுமை அறிய முடிகிறதா?
ஆம் என்று பதில் வந்தால் அது கருணை...
நானும் கேள்விக்கான பதில்களை
என்னிடம் கேட்டுக் கொள்கிறேன்!!!
இனியபாரதி.