நானும் நீயும்
பேசும் மொழி
என் மொழியாக இருக்க வேண்டும் என்று
ஆசைப்படுவது தவறுதான் என்றாலும்
என் மொழி
உன் மொழியாகவும்
உன் மொழி
என் மொழியாகவும்
என்றும் இருக்கும் பட்சத்தில்
நமக்குள் பிரிவு ஏது???
என்றும் உன் பாதம் சரணடைவேன் இறையே!!!
இனியபாரதி.
1 கருத்து:
வார்த்தைகள் ஊமையாகும் போது கண்ணீர் பேச ஆரம்பிக்கும்... விழும் கண்ணீர் துளிகள் இறையின் பாதத்தை சரண் அடையும் மொழியாக மாறும்..
கருத்துரையிடுக