சில நேரங்களில் நீ செய்யும் குறும்புத்தனங்கள்
என்னை எரிச்சலடைய வைத்தாலும்
நீ இல்லாத நேரங்களில் அதை நினைத்து
நான் சிரித்தது தான் அதிகம்!!!
உன்னுடன் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே
பல நாட்கள் கடந்தாலும்
நீ என்னை விட்டுப் பிரியும்
தருணங்கள் தான்
சண்டையிலும் நாம் பகிர்ந்து கொண்ட அன்பை
நான் உணரச் செய்கின்றன!!!
பல நேரங்களில் நான் அணிந்து கொள்ளும்
உடைகளையெல்லாம் அழகு அழகு
என்று இரசிக்கும் உன் இரசனை
சில நேரங்களில் எனக்கே சிரிப்பாய் தோன்றும்!!!
பேச வேண்டுமென்று நீ நினைக்கும் அந்த நிமிடம்
என்னிடமிருந்து அழைப்பு வருகிறதென்று
நீ கூறும் நேரங்களும் இரசிக்கும் நேரங்கள் தான்!!!
இப்படியே எல்லாவற்றையும் கூறிக்கொள்ளாமல்
மறைத்து மறைத்து வைக்கும் உன் அன்பும்
என்றும் எனக்கு சுகம் தான்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக