உன் அன்புக் கரங்களால்
என் கண்ணீர் துடைக்கும் அந்த நிமிடங்கள்...
உன் ஆசைப் பார்வையால்
என் வெட்கத்தைத் தூண்டும் அந்த நிமிடங்கள்...
உன் அழகிய பரிசுகளால்
என் பிறந்த நாளை அழங்கரிக்கும் அந்த நிமிடங்கள்...
உன் இன்ப வார்த்தைகளால்
என் மௌனம் களைக்கும் அந்த நிமிடங்கள்...
உன் மௌனத்தால்
உன்னைக் கொஞ்சத் தூண்டும் அந்த நிமிடங்கள்...
உன் குறும்புச் சேட்டையால்
நான் கோபப்படும் அந்த நிமிடங்கள்...
என எல்லா நிமிடங்களும்
உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும்
வரமே எனக்குப் போதும்!!!
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
சனி, 3 பிப்ரவரி, 2018
காணக்கரிய....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக