விடியற்காலையில் எழுந்து
உன் முகம் பார்க்கும் அந்த நிமிடம் தான்
அந்த நாளில்
என் சூரிய உதயம்!!!
சமைக்க உதவவில்லை என்றாலும்
தொந்தரவு செய்வது
உன் வழக்கம்!!!
அதைக் கண்டு கொள்ளாமல்
இருப்பது என் பழக்கம்!!!
காலை உணவு அருந்துவது
ஒரு குகையைக் குடைவது போல்
அவ்வளவு சிரமம் தான் உனக்கு!!!
அதை எளிதாய் மாற்றும் வேலை எனக்கு!!!
அலுவலகத்திற்குச் சென்ற அடுத்த நொடி
உன்னிடமிருந்து வரும் அழைப்பிற்காய்
காத்திருப்பேன் கால்கடுக்க
அலைபேசியின் அருகில்!!!
சூரிய ஒளி பிரகாசிக்கும் அறை கூட
இருட்டறை போன்றே உணர்கிறேன்
நீயில்லா இந்தத் தனிமைப் பொழுதுகளில்!!!
உன் நினைவுகளை எல்லாம்
எழுத்தாய் வடிக்கிறேன்
என் நாட்குறிப்பேட்டில்!!!
பக்கங்கள் தீரத்தீர
அந்திமாலையின் இளந்தென்றலும்
மெதுவாய் உன் வாசத்தை
வீட்டிற்குள் எடுத்து வந்தது!!!
சட்டென்று என் வானில்
ஓர் அழகிய வானவில்!!!!
என் தோட்டமெல்லாம் பூத்துக் குலுங்கியது!!!
உன் இதய அறையின் அருகில்
என் இதயம் துடித்துக் கொண்டிருந்தது!!!
அந்த அனுபவமே ஒரு முழுநீளத் திரைப்படமாய்
என் எண்ண அலைகளில் ஓட!!!
நிலவின் வெளிச்சம் என் வீட்டிற்குள்
சொல்லாமல் நுழைந்ததை உணர்ந்தேன்!!!
சட்டென்று விலகி நின்ற என்னை
உனதிரு கண்களும் திருடி
அணைத்துக் கொண்டன மறுபடியும்!!!
அடுத்த நாள் விடியலுக்காய் காத்திருக்கிறேன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக