கவிதைகளால் உன்னை வடிக்கத்
தெரிந்த எனக்கு
உன் நினைவுகளில்
என்னை வடிக்கத்
தெரியவில்லை....
கோபங்கள் பல இருந்தாலும்
என் நினைவை விட்டு
நீங்காத முகமும்
உன்னுடையது தான்....
என்னைக் கோபப் படுத்திப்
பார்க்கும்
உன் வார்த்தைகள் கூட
ரசிக்க வைக்கின்றன உன்னை....
நீ இல்லா நேரமெல்லாம்
வெறுமையாய் என்றும்....
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக