வாழ்க்கையே வேண்டாம் என்று
வெறுத்து ஒதுக்கும் நேரத்தில் கூட
பணமிருந்தால்
வாழத் தோன்றும்!!!
பெற்றோர்கள்...
குழந்தைகள்...
மாமனார் மாமியார்...
என்று இல்லாத குறைறைக் கூட
பணம் தீர்க்கும் போல!!!
தாயன்பைப் பணம் கொடுத்துப்
பெற்றிடலாம் போல!!!
அழகற்றவளைக் கூட
அழகாய் மாற்றும் தன்மை
பணத்திற்கு உண்டு போல!!!
பாசம் கூட பாசாங்கு பண்ணும் வேளையில்
பணம் உதவும் போல!!!
இப்படி
எல்லா இடங்களிலும்
பணம் மட்டுமே பேசுகின்றது!!!
வாழ்க இந்த வையகம்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக