இருவரும் சண்டையிட்டு மட்டுமே
அதிகமாய் பார்த்த நாங்கள்
நினைத்ததென்னவோ
'நீங்கள் இருவரும் எப்போதும்
இப்படித்தான் சண்டை போட்டுக்கொண்டே
இருப்பவர்களென்று'
உங்கள் சண்டைகள் தான்
இருவர் அன்பின் அடையாளம்
என்பதை உணர்ந்தோம் பின்னர்!!!
என்ன தான் சண்டையிட்டுக் கொண்டாலும்
அன்றிரவே சமரசம் செய்துகொள்வது
உங்களின் சிறப்பன்றோ?
இருவரும் மனமும்
ஒன்றையே நினைத்து
ஒன்றேயே செய்து
என்றும் இன்று போல் வாழ
'இனிய திருமண நாள் வாழ்த்துகள் - அம்மா, அப்பா'
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக