திங்கள், 1 ஜனவரி, 2018

முதல் நாளின் வலைப்பதிவு!

இனிய புத்தாண்டு தின வாழ்த்துகளுடன் தொடங்குகிறேன்...
இனி வரும் நாட்களில்
ஒன்றை நான் கடைபிடித்தால்
எனக்கும் எந்தக் கவலையும் இல்லை!
மற்றவர்களிடமும் ஒருவரைப் பற்றிக்
குறை சொல்லத் தேவையும் இல்லை
என்று யோசித்தேன்!
அதுதான்....
'ஒருவரிடம் எனக்கு ஏதாவது
மனத்தாங்கல் வரும் போது
நேரடியாக அவரிடமே பேசிவிட வேண்டுமென்று'
தேவையில்லாமல் ஒருவரைப் பற்றி
மற்றவரிடம் குறைசொல்லி
அவர் மனதில் மற்றவரைப் பற்றிய தவறான
எண்ணங்களை விதைத்து...
இதுபோன்ற பல தேவையற்ற நடத்தைகளுக்கு
நான் காரணமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்!
முடிந்த அளவு பின்பற்றவும் ஆசைப்படுகிறேன்!

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு தின வாழ்த்துகளுடன்...

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: