என்னைத் தாங்கி வழிநடத்தும் இறைவா!
உமக்கு நன்றி!
கோடான கோடி மக்கள் வாழும் இவ்வுலகில்
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும்
கிடைக்காத
அன்பான தாய்...
அரவணைக்கும் தந்தை...
பாசமழை பொழியும் தங்கை...
அறிவான குழந்தை...
என்று
என்னை இந்நாள் வரை
அழகான குடும்பத்திற்குள் வைத்துக் காத்ததற்காய்
உம்மைப் போற்றிப் புகழ்கிறேன்!
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும்
கஷ்டப்பட்டு
காயப்பட்டு
வேதனைப்பட்டு
வெட்கப்பட்டு
எங்களுக்காய் எல்லாவற்றையும் தாங்கி
உம் சார்பாக இருந்து என்னை காத்து வழிநடத்தி வருகின்ற
என் 'மம்மி, டாடிக்கு' என்றும் நல்ல மகளாக, மகனாக இருந்து
அவர்களைப் பார்த்துக் கொள்ள எனக்கு உடல், மன தைரியத்தைக் கொடுத்து
இந்த வருடம் முழுவதும் என்னை வழிநடத்த உம்மை வேண்டுகிறேன்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக