கருமை அறையிலிருந்து வெளிவந்த
விலைமதிப்பில்லா முத்து நீ!
உன் பிஞ்சு விரல் நகங்கள்
பளபளக்கும் பவளங்கள்!
உன் உள்ளங்கை ரேகைகள்
பாய்ந்தோடும் அருவிகள்!
உன் உள்ளங்கால்கள் இரண்டும்
தனித்திருக்கும் கண்டங்கள்!
உன் மேனி முழுதும்
ரோஜா இதழின் வாசம்!
கண்ணிரண்டும் கன்னமிடும்
பால் வண்ணக் கிண்ணங்கள்!!
உன் பேச்சில் மயங்க தவிக்கின்றேன்!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக