நீ கண்சிமிட்டும் அழகைக்
காண இயலா எனக்கு
கிடைத்ததென்னவோ
உன் வறுவல் மட்டும் தான் 'மீன்'
ஆசையாய் அழைத்து வந்த
என் மணமகளைக்
காப்பாற்ற முடியாமல்
தவிக்கும் நான் 'நாட்டுக்கோழி-சேவல்'
தாவிக்குதித்து ஆடிப்பாடிய
உன்னைத் தலைகீழாய்க்
கட்டிவைத்து கழுத்தறுக்கும்
ஒரே இனம் : மனித இனம் 'ஆடு'
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக