செவ்வாய், 23 ஜனவரி, 2018

இனியவள் இனியவனுக்கு...

நீ பார்க்கும் நேரமெல்லாம்
நானும் உன்னைப் பார்க்க
ஆவலாய் என் முகம் நிமிரும் நேரத்தில்
வெட்கத் திரை
என் விழிகளை மூடுகின்றது!!!
அருகருகில் அமர்ந்து கொண்டு
உன் மூச்சுக் காற்று என்மீது
படும் போது ஏற்படும் உஷ்ணம்
என்னையறியாமல்
என் இதயக்கதவைத் திறந்து
என் காதலை உன்னிடம்
சொல்லத் துடிக்கின்றது!!!

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: