ஞாயிறு, 16 ஜூலை, 2017

எங்கே சென்றது?

இன்று, ஒரு சிறப்பானதொரு காணொளியைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதன் ஆரம்பத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் இதுதான்... 'உணவுக்காக ஒரு குரங்கை அடிக்கின்றது ஒரு சிறுத்தை. அடித்த பிறகு தான் தெரிகின்றது, பிறந்த குட்டி ஒன்று இருக்கிறதென்று... தாயைக்கொன்றுவிட்டோமே.. குட்டியை அனாதையாகிவிட்டோமே என்ற வேதனையில் பசியை மறக்கின்றது அந்தச் சிறுத்தை. குட்டி குரங்கை சிறுத்தை அரவணைத்துக் காக்கின்றது.. செய்த பாவங்களுக்கு குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனித ஜென்மங்களுக்கு இந்த வீடியோ பதிவு' என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் காணொளியில் சிறுத்தை எப்படி அந்தக் குட்டிக் குரங்கை இரவெல்லாம் அரவணைத்துக் காத்;தது என்ற பதிவு இருந்தது.

அந்தக் காணொளியைக் கண்ட போது, சிறுத்தையை நினைத்துப் பெருமிதமும், அந்தக் குட்டிக் குரங்கை நினைத்துப் பரிதாபமும் தான் வந்தது.

ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்குக் கூட இப்படி ஒரு மனநிலை இருக்கும்போது ஏன் இந்த மனித இனம்(நம் இனம்) இப்படி இருக்கிறது? என்று யோசிக்கத் தோன்றியது.. ஒருசிலரின் தவற்றிற்காய் அனைவரையும் குறைகூற முடியாது. இந்த உலகில், இன்னும் நல்லவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

செய்த பாவத்திற்குப் பிராய்ச்சித்தம் தேடிக் கொண்டது அந்தச் சிறுத்தை. ஆனால், செய்வது பாவம் என்று உணராமலே அனைத்தையும் செய்கின்றது இந்த மனித இனம்.
நானும் என்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன்.
காணொளியைக் காண கீழே சொடுக்கவும்...

https://youtu.be/ugi4x8kZJzk

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: