புதன், 12 ஜூலை, 2017

இருமடங்காகிறது...

கவிதைக்குத் தெரியாது
நான் உன்னைப் பற்றித் தான் எழுதுகிறேன் என்று
தெரிந்திருந்தால் ஒருவேளை திட்டியிருக்கும் என்னை...
உன்மனம் புரியாதவளை இன்னுமா நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று!!!
காத்திருத்தலுக்குத் தெரியாது
நான் உனக்காய்த் தான் காத்துக்கொண்டிருக்கிறேன் என்று
தெரிந்திருந்தால் ஒருவேளை சிரித்திருக்கும் என்னைப் பார்த்து...
வராதவளுக்காய்க் காத்துக்கொண்டிருக்கிறாயே என்று!!!
இரவிற்குத் தெரியாது
நான் இன்னும் தூங்கவில்லை என்று
தெரிந்திருந்தால் ஒருவேளை சீக்கிரமாய்த் தூங்க வைத்திருக்கும் என்னை...
எப்படியும் அவள் உன்னைப் பார்க்க வரப்போவதில்லை என்று!!!
அவனும் காத்திருக்கிறான்...
அவளும் அவனுக்காய் காத்திருக்கிறாள்!
காத்திருத்தலில் அன்பு இருமடங்காகிறது.

காத்திருக்கிறேன் உன் வருகைக்காய்...

உன்,
இனியபாரதி.

கருத்துகள் இல்லை: