பிறந்தவுடன் என்னைப் பாசமாய்த் தூக்கி அணைத்துக் கொஞ்சியதும் நீங்கள் தான்!
குழந்தையாய் என்னைக் கட்டி அணைத்து முத்தமிட்டதும் நீங்கள் தான்!
பாடம் படிக்காத போதெல்லாம் என்னை அதட்டிப் படிக்க வைத்ததும் நீங்கள் தான்!
தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற போது என்னைக் குறித்துப் பெருமிதப்பட்டதும் நீங்கள் தான்!
பன்னிரெண்டு வயதிலும் என்னைத் தூக்கிக் கொண்டு நடந்து அழகு பார்த்ததும் நீங்கள் தான்!
பதினான்கு வயதில் வந்த காதல் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்ததும் நீங்கள் தான்!
இருபது வயதில் பாசத்தை உணர வைத்ததும் நீங்கள் தான்!
இருபத்து மூன்று வயதில் சொந்தக் காலில் நிற்கத் தைரியத்தைக் கொடுத்ததும் நீங்கள் தான்!
இருபத்து ஆறு வயதிலும் மனம் தளராமல்
நிதானமாய்
எல்லாவற்றையும் எதிர்கொள்ளும்
பக்குவத்தைக்
கற்றுக் கொடுத்ததும்
நீங்கள் தான்....
'நீங்கள்' இல்லை என்றால் நான் இல்லை...
என்றும் என் அன்பில் என் அப்பா...
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக