சனி, 12 மே, 2018

உனைத் தேட...

ஆயிரம் தொலை சென்றால் கூட
ஆனந்தமாய் நான் இருப்பேன்
உன் நினைவுகளை சுமந்து கொண்டு!!!

கண்கட்டி வித்தையாய்
வாழ்க்கை கசந்தாலும்
கண்ணீர் சிந்தாமல்
கனவுகளுடன் காத்திருப்பேன்!!!

மறைமுகமாய் நீ இரசித்த
மனதுக்குள் மஞ்சமிட்டு
என் இராத்திரியின் தூக்கத்தைக்
களைத்தவனே!!!!

உனைத் தேடுகிறேன்....

இனியபாரதி.

கருத்துகள் இல்லை: