அழகாய் நீ உச்சரிக்கும்
ஒவ்வொரு வார்த்தையையும்
உன் ஆசிரியை கேட்கும் போது
உன்னைக் கட்டி அணைத்து
முத்தமிட ஆசை கொள்வாள்!!!
உன் அருகில் அமரும்
குழந்தைகள்
உன்னுடன் நட்பு கொள்ள
ஆவல் கொள்ளும்!!!
உன்னைப் பெற்றெடுத்தவள்
பெருமை கொண்டாலோ இல்லையோ
நான் பெருமை கொள்கிறேன்
உன் தாயாய் இருப்பதில்!!!!
இனியபாரதி.