வெளியே செல்கிறேன்...
வெளியே சென்ற நான்
என் இஷ்டப்படி அலைந்து திரிகிறேன்...
அலைந்து திரிந்த நான்
அப்படியே வீட்டிற்குள் நுழைகிறேன்...
வீட்டிற்குள் நுழைந்த நான்
அனைவரையும் தொடுகிறேன்...
என் குழந்தைகளைக் கொஞ்சி விளையாடுகிறேன்...
அத்தோடு என் வீட்டுப் பொருட்களையும் தொடுகிறேன்...
நான் என் குடும்பத்திற்குக் கொடுக்கப்போ வது
மிகப் பெரிய பரிசு தான்!!
"கொரோனா" என்ற மரணம்...
சிந்திப்போம்!
செயல்படுவோம்!!!
இனியபாரதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக