சமீபத்தில்.... இரசித்துப் பார்த்த ஒரு படம்....
வித்தியாசமான கதைக்களம்... இதுவரை யாரும் எடுத்துச் சொல்லாத பல சிறப்பான காட்சிகள் இடம் பெற்ற படம்...
இயல்பான வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அப்படியே படமாக்கப்பட்டிருந்தன....
காதல் என்று சொல்லாமல் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவை சிறப்பாக வருணித்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு அநாகரீகப் பாடல் கூட இல்லாத படம்... இந்தப் படம் வந்து பல மாதங்கள் ஆகின்றன போல... இருந்தாலும் இப்போது தான் நான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது...
ஆச்சரியப்பட்ட சில விசயங்கள்....
பெற்றோர் எப்படி இருந்தாலும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது.
அன்பை இப்படி எல்லாம் காட்ட முடியும் என்று உணர்த்துவது.
மொத்தத்தில் எல்லாம் அருமை...
நன்றி இயக்குனர் ஐயா!!!
இனியபாரதி.