யாரும் அன்பாக அழைக்கப்பட ஆசைப்படுவார்களா?
மதிப்பாக நடத்தப்பட ஆசைப்படுவார்களா?
என்னைப் பொறுத்தவரை என்னை அன்பாக நடத்தினால் போதும் என்பது என் எண்ணம்...
இன்று ஒரு நிகழ்வு...
என் கல்லூரி ஆசிரியருக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டும்... நானும் புலனம் மூலமாகத் தகவலைத் தெரிவிக்க முற்பட்டேன்...
அன்பான ஆசிரியர் அவர்களுக்கு... என்று டைப் செய்து அனுப்பியும் விட்டேன்...
அனுப்பிய இரண்டொரு நிமிடங்களில் அவரிடம் இருந்து ஒரு குரல் பதிவு என்னை வந்தடைந்தது...
அதில் அவர் குறிப்பிட்டிருந்தது...
நீங்கள் ஆசிரியரை "அன்பான" என்று அழைத்தால், ஆசிரியர் மாணவரிடம் அவ்வளவு நெருக்கமாகப் பழகுகிறாரா? என்று எல்லோரும் நினைப்பார்கள்... எப்போதும் மதிப்பிற்குரிய என்று தான் எழுத வேண்டும் என்று அனுப்பி இருந்தார்...
என் கேள்வி என்னவென்றால்!!
ஆசிரியர் மாணவருக்கு இடையே உள்ள உறவு
மதிப்புள்ளதாக இருக்க வேண்டுமா?
அன்பானதாக இருக்க வேண்டுமா?
நான் புரிந்து கொண்ட விதம் தவறா??
அன்பு தவறென்றால் மாற்றிக் கொள்கிறேன்..
என் ஆசிரியைக்காய்!!!
மதிப்பிற்குரிய!!!
இனியபாரதி.
உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொள்ள...
iniyajeni3@gmail.com