செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

சுதந்திர தினம்....

இன்று சுதந்திர தினம். சுதந்திர தினம் என்றதும் நம் நினைவிற்கு வருவது, நம் நாடு விடுதலை அடைவதற்காகப் பாடுபட்ட தலைவர்கள், அவர்களின் தியாகம், அர்ப்பணிப்பு, அனைத்துமே தான். இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நமக்கு, நம் முன்னோர்கள், அவர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தனர். ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் அந்தச் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்று பார்த்தால், பத்தில் இருவராகத் தான் இருப்பர். நம் ஒற்றுமையை உணர்வைக் கண்டு ஆங்கிலேயர்களே நமக்கு விடுதலை கொடுத்துவிட்டனர். ஆனால் நாம் நமக்காக உழைக்கும் நமக்குக் கீழ் உழைக்கும் நம் வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கிறோமா? ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம் என்றால் நமக்குக் கீழ் உள்ளவர்களைச் சமமாகப் பாவிக்கிறோமா? பள்ளியில் நம்முடன் படிக்கும் எல்லா மாணவர்களுடனும் ஒரே கண்ணோட்டத்துடன் பழகுகிறேனா? நம்மையே நாம் கேள்வி கேட்டுப் பார்ப்போம். அனைத்துக் கேள்விகளுக்கும் இல்லை என்று தான் பதில் வரும். இதில் சுதந்திரம் பெற்று விட்டதற்கு அர்த்தமில்லை. என்று எல்லா கேள்விகளுக்கும் பதில் ஆம் என்று வருகிறதோ அன்று நாம் மகிழ்வுடன் கொண்டாடுவோம் நம் சுதந்திர தினத்தை 'முழக்கத்துடன்'....
சுதந்திரம் என்பது நம் பேச்சில் மட்டும் இருப்பது அல்ல. நம் உணர்வில் கலந்த ஒன்றாக இருக்கும் போது தான் அது உண்மையாக சுதந்திர தினம்.

புதன், 12 ஆகஸ்ட், 2015

உன் செல்லம்மா பேசுகிறேன்...

எனக்கு விவேகானந்தர் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடைய சில வாசகங்களை என் அறையில் எழுதி ஒட்டி வைத்திருக்கிறேன். அதனால் தினமும் அதை வாசிக்க வாய்ப்பு கிடைத்துவிடும். 'இந்த தேசத்தில் பிறந்த ஒரு புழு கூட உண்மைக்காகவே உயிர் விட வேண்டும்' என்பது தான் அந்த வாசகம். இதே போல் அவருடைய பல வாசகங்களை என் குறிப்பேட்டில் குறித்து வைத்திருக்கிறேன்.
அவரது காலத்தில் நான் வாழவில்லையே என்ற ஏக்கம் எனக்குண்டு.
இரண்டு நாட்களுக்கு முன் பாரதி(தமிழ் படம்) பார்த்தேன். பாரதி கதாப்பாத்திரத்தின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த இரண்டு நாட்களாக என் எண்ண ஓட்டங்களெல்லாம் அந்தப் பாரதி படத்தைப் பற்றித்தான்.
பாரதியாரால் எப்படி இ;வ்வளவு எளிமையாக வாழ முடிந்தது? 'மகாகவி' பட்டம் கிடைத்த பின் கூட தன் சமுதாயத்திற்காக உழைக்க வேண்டுமென்ற ஏக்கம்.... தன் குடும்பத்தின் வறுமையைக் காணாமல் அடுத்தவர் குடும்பத்தின் பசியைத் தீர்க்க உதவிய இவரது பரந்த மனம்...கீழ்சாதிஇ மேல் சாதி என்று பாராமல் அனைவரையும் சமமாக மதிக்கும் சமத்துவப் பண்பு...இப்படி பல பண்புகளுக்குச் சொந்தக்காரரான இவர்  இறந்த பொழுது அழுதது... சொற்பம் 20 பேர் மட்டும் தான். இவருக்கே இந்த நிலை என்றால்!!!! எனக்கு!!!!!
சிந்தனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. எனக்குஇ இந்தச் செல்லம்மா பாத்திரம் மிகவும் பிடித்தது. 'செல்லம்மா'– அவரின் மனைவி. இன்றைய காலக்கட்டத்தின் பெண்களை இந்தச் செல்லம்மாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். தன் கணவன்இ ஒரு நாள் ஒரு பொழுது பணம் தரவில்லை என்றால் கூட, அன்று காளி பூஜை, அந்த வீட்டில் தான் நடக்கும். ஆனால் , தன் கணவன் பித்துப் பிடித்தவன் என்று மற்றவர் சொல்வதைக் கேட்டும் கூட தன் கணவனை, ஒரு நாளும் விட்டுக் கொடுக்காத பெண் தான், நம் செல்லம்மா...
செல்லமா கூப்பிடுவது தான் எனக்குப் பிடிக்கும்...
ஆனால்.... இப்போது என்னைச் செல்லம்மா என்று கூப்பிட ஆசைப்படுகிறேன்.
இப்படி ஒரு மகாகவியின் செல்லம்மா(செல்லமா)க நான் இல்லாத நிலையை எண்ணி வருந்துகிறேன்.
தமிழின் அருமையை எனக்கு உணர்த்திய என் கவி 'பாரதிக்கும்'....
பெண்மையின் பெருமையை உணர்த்திய 'செல்லம்மாவிற்கும்'...
என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

விடியலை நோக்கியொரு விரதம்!... கவிதைகள்

இந்தப் புத்தகத்திலிருந்து நான் இரசித்த சில வரிகள்...
வேட்கை உள்ள விவேக இளைஞனே
வேங்கை நீ
உன்னிடமிருப்பது வெறுங்கையல்ல...
நினைத்தாலே நிறைவேறும்
நீ
நிஜமாக்க வேண்டிய திருவாசகம்.
சில தோல்விகள்
உனை உசுப்பும்
பெரும் வெற்றிக்கான சிறு வலிகள்
நீ
கலங்கி மட்டும் கண்ணீர் விடாதே.
அது
கோழைகளின் ஆயுதம்.
வெறிகொண்டு கற்றலும்
வீறு கொண்டு உழைத்தலும்
உன்னை வெளிக்கொணரும் கருவிகள்
உண்டு உறங்கி விழித்து
வாழ்க்கை உருண்டோடினால்
மனிதனுக்கும் மலைப்பாம்புக்கும்
வித்தியாசமென்ன?
மனிதர்கள்
காசு பணத்தின் பக்கம்
கடவுள்
நல்லவர்களின் வர்க்கம்
ஆசா னுரையால் அறிவை வளர்க்காமல்
பேசுவதால் உண்டோ பயன்
நீ நினைத்தால் வான வில்லைக்கூட
வளைத்து வில்லாக்கி விடுவாய்!
தேடி அடைபவை:
1. செல்வச் சிறப்பும்
2. நல்லோர் உறவும்
3. நோயிலா வாழ்வும்
தேடக் கிடைக்கும்.

நண்பர்கள் தினம்...


இன்று, உலக நண்பர்கள் தினம். 'நண்பர்கள்' – நாம் நன்றாய் இருக்க வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்கள். நம்மைப் புரிந்து கொள்ளும் இ நம் உடன் பிறவா சகோதர, சகோதரிகள். 'நண்பன்' என்ற வார்த்தையைக் கேட்கும் போது.. எனக்குள் தோன்றுவது இது தான். 'தன் நண்பனுக்காய் உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு இல்லை' என்பது தான். நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதா? மனைவிக்காக பிள்ளைகளுக்காக என்றுச் சொல்லவில்லை. நண்பன் என்று கூறுகிறது விவிலியம். ஏன்ன ஆச்சரியம்? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களா நண்பர்கள்! ஆம்... முக்கியம் தான். உன் நண்பனைச் சொல்... நீ யார் என்று கூறுகிறேன் என்ற வழக்குச் சொற்றொடர் ஒன்று உண்டு. சிறு வயதில் அதற்கான அர்த்தம் புரியவில்லை. ஆனால் இப்போது உணர முடிகிறது அதன் அர்த்தத்தை. உண்மையாகவே நம் நண்பர்களை வைத்து நம்மை யார் என்று கணித்துவிடலாம். இன்றைய தினம் சிறப்பாக என் சிறு வயது முதல் எனக்கு நண்பர்களாய் இருந்த என் தோழிகளை எண்ணிப் பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்ல விழைகின்றேன்.
என் பள்ளித் தோழிகள் அர்ச்சனா, சிவசங்கரி என் கல்லூரித் தோழிகள்(எல்லோரும் என் இனிய நண்பர்கள் தான்) குறிப்பாக லலிதா, மயில் கிறிஸ்டி. எனக்கு வழிகாட்டிய சில நண்பர்களும் உள்ளனர்.
இவர்களைத் தவிர என் தங்கையும் என் மம்மியும் எனக்கு உற்ற தோழிகள். நண்பர்கள் தினமான இன்று அனைவரையும் நினைவு கூற ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்ததற்கு இறைவனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

என் அன்புச் செல்லம் ஈஷாவிற்கு....

உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் கொஞ்ச ஆசை...
உன் கன்னங்களில் என் இதழ் ஈரத் துளிகளைப் பரப்பிட ஆசை...
உன் கீச்சுக் குரலுக்குத் தாளமிட ஆசை...
உன் அழுகைக்கு  இசையமைக்க ஆசை...
உன் விரல்நகக் கீரல்கள் என் கன்னங்களில் பதிய ஆசை...
குட்டிச் செல்லமே...
என் இனியகீதமே...
உன்னைக் காணத் துடிக்கும் அனைவருக்கும்
சீக்கிரம் வந்து
அருள்பாவிக்கும் நாள் எந்நாளோ?


இந்தப் பெயர் e மிகவும் பிடித்துவிட்டது. இந்தப் பெயரைக் கேட்கும் போதெல்லாம் என் உள்ளங்கைகளுக்குள் ஒருபிஞ்சுக் குழந்தையின் கையை இறுகப் பற்றிக் கொண்டதுபோன்றஒருஉணர்வு. என் நினைவலைகளுக்குஉயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் என் குட்டிஈஷாவிற்கு இந்தவரிகள்சமர்ப்பணம்....

தேடல்...

இன்பத்தைத் தேடி அலைந்தேன் - ஆனால்
இன்பமும் துன்பமும் கலந்த சந்தோஷஇ சமாதான
வாழ்க்கை கிடைத்தது.
புகழைத் தேடி அலைந்தேன் - ஆனால்
என் செயல்கள் என் வாழ்க்கைக்குச்
சான்றாய் இருந்தது.
பணத்தைத் தேடி அலைந்தேன் - ஆனால்
என் தேவைக்கேற்பஇ நிறைவான
செல்வம் கிடைத்தது.
உறவுகளைத் தேடி அலைந்தேன் - ஆனால்
என்றும் என்னை விட்டுப் பிரியாத
உறவாக நீ கிடைத்தாய்...
'என் இறைவா'
என் தேடல் என்றும் நீயாக....
உன்னை மட்டும் தேடும் மனம் வேண்டுகிறேன்.
இப்படிக்கு...
தேடகி.

நம்பிக்கை

இன்று மாலைத் திருப்பலிக்கு ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். இன்று 'இறைவன் மீது நம்பிக்கை வைப்பது' பற்றிய வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. எப்போதும் மறையுரை என்றால்இ எனக்கு இது தான் வழக்கம். சாமியார் உரை நிகழ்த்தும் போது நாம் அவருக்குத் தெரியாமல் மறைவாகத் தூங்குவது. இன்றும் அப்படித் தான் என்று நினைத்து அமர்ந்தேன். எடுத்ததும் நிர்வாணச் சாமியார் என்று ஆரம்பித்தார். என்னடா இது? இன்றைய வாசகத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லையே என்று நினைத்துஇ சரி என்னதான் சொல்கிறார் என்று கேட்கலாம் என்று கொஞ்சம் கவனித்தேன். ஓவ்வொருவரும் தன்னைக் கடவுள் என்று அழைத்துக் கொண்டு தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு அலைகிறார்கள். காமத்தின் வழியாக இறைவனைக் காணலாம்; என்கிறான் ஒருவன். நான் தான் கடவுளின் அவதாரம் என்கிறான் ஒருவன். ஒருவன் படுத்திருந்த இடமெல்லாம் தங்கம். ஒருவன் படுக்கையறை தொலைக்காட்சிப் பெட்டியில் காலையிலிருந்து மாலை வரை ஒளிபரப்பப்படுகிறது. இவ்வாறு சற்று ஆவேசமாகவே பேசிக் கொண்டிருந்தார். எனக்கு சிரிப்பு ஒரு பக்கம். இவர் என்ன தான் சொல்ல வர்றார்... பார்க்கலாம். என்ற எண்ணம் மறு பக்கம். ஒருவழியாக 'Homosexual' வரைக்கும் இழுத்து மறையுரையை நிறைவு செய்தார்.
இவ்வளவு எடுத்துக் காட்டுகள் இவர் கூறியதுஇ ஒரே ஒரு விசயத்திற்காகத் தான். 'என் மீது நம்பிக்கை வையுங்கள். என்னை நம்புகிறவர் என்னை உண்டாக்கியவரையே நம்புகிறவர் ஆவார்'. இவ்வளவு தான். இதற்குக் கூற உதாரணங்கள் ஆயிரம் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விடுத்து தேவையில்லாமல் அவருடைய சக்தியையும் இழந்துஇ இவ்வளவு பேச்சுகள் தேவையா?
எங்கள் ஆலயத்தில் ஒரு சாமியார் இருந்தார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம். அவ்வளவு அழகாக ஒவ்வொன்றையும் எடுத்துக் கூறுவார். அனைவரும் பாராட்டுவார்கள். ஆனால் நான் ஒரு முறை கூட அவரை நேரில் பாராட்டியதேயில்லை. இப்பொழுது அவரைப் பாராட்ட வேண்டும் போல் தோன்றுகிறது.ஒன்று இல்லாத போது தான் அதன் அருமை தெரியும் போல... நீங்களும் யாரையாவது பாராட்ட வேண்டுமென்று நினைத்தால் உடனே பாராட்டி விடுங்கள். மகிழ்ச்சி பாராட்டுபவருக்கும் கிடைக்கும். பாராட்டப்படுபவருக்கும் கிடைக்கும். அந்த அருட்தந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் இ நானும் கண்டிப்பாக பாராட்டுவேன்.

முயற்சி திருவினையாக்கும்



“A Break in the Chain” By Chris d’Lacey
இன்று எனது அண்ணியின் பையன் எனக்குப் படிக்கக் கொடுத்த ஒரு அருமையான புத்தகம். இந்தப் புத்தகத்திலிருந்து நிறைய புது வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன். பல வாரங்களுக்குப் பிறகு படிக்கும் ஒரு ஆங்கிலப் புத்தகம். அருமையாக இருந்தது. வார்த்தைகளைக் கையாண்ட விதம்இ நன்றாக இருந்தது. துருவக் கரடிகளுக்கு கடலில் கலக்கப்படும் எண்ணெய்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும்;இ அதனால் உணவுச் சங்கிலி பாதிக்கப்படுவது பற்றியும் அழகாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆசிரியர். துருவக் கரடிகளைக் காப்பாற்ற மாணவர்கள் எடுக்கும் முயற்சி... இது தான் கதை. நிறைய நாவல்களைப் படிக்க வேண்டும். நானும் ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுத வேண்டும். சிரிக்காதீங்க பா.... என் நண்பன் கூட நான் ஆங்கிலத்தில் ஏதாவது எழுத வேண்டும் என்று சொன்னால் போதும்இ உடனே சிரித்துவிடுவான். அவனைப் போல் சிரிப்பது போல் தெரிகிறது? பாருங்கள். நானும் ஒரு நாள் கண்டிப்பாக ஆங்கிலத்தில் கவிதை எழுதுகிறேன். முயன்றால் முடியாததது ஒன்றுமில்லையே!

துறவறம்

இன்றையதலைப்பின் உள் அர்த்தத்தைகண்டிப்பாகஅனைவரும் புரிந்துவைத்திருத்தல் வேண்டும். 
சும்மாசும்மாயாரையாவதுதுறவிஇ சாமிஎன்றுஅழைக்காதீர்கள். துறவிக்கானஒருசிலகடமைகளையாவதுஅவர்கள் சரியாகநிறைவேற்றுகிறார்களாஎன்றுபார்த்துவிட்டுஅழையுங்கள். அப்படிஎன்னகடமைகள் அவர்களுக்கு இருக்கின்றன? 
துறவுஎன்பதுதுறத்தல் அல்லது இழத்தல்.துறத்தல் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். கோயிலில் இருக்கும் துறவிமணவாழ்க்கையைத் துறக்கிறார். திருமணமானகணவன் தன் சுகங்களைத் துறக்கிறான். மனைவிதன் ஆசைகளைத் துறக்கிறாள். பிள்ளைகள் சிலநேரம் அவர்கள் விருப்பங்களைத் துறக்கின்றனர். வேலைசெய்பவர்கள் தங்கள் ஆற்றலைத்துறக்கின்றனர். இப்படிதுறத்தல் ஒவ்வொருவர்வாழ்விலும்இ ஒவ்வொருகட்டத்திலும் நிகழ்கின்றது. 
துறத்தல் என்பதுமுக்கியமாகநம்மிடம் இல்லாதஒன்றைத் துறத்தல் அல்ல. நம்மிடம் இருப்பதில் சிறந்ததைத் துறத்தல்.
இந்தஉலகில் உள்ளஒவ்வொரு ஜீவனும் ஏதாவதுஒன்றைத் துறக்கத் தான் செய்கின்றன. உதாரணத்திற்குஆடு கோழிபோன்றவைத் தன்னைத் துறப்பதனால் தான் நாம் அதன் மாமிசத்தைச் சுவைத்துச் சாப்பிடுகிறோம். இப்படிசொன்னால் அடுக்கிக் கொண்டேபோகலாம்.
துறத்தலின் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளும் போதுநம் உறவுகளுக்குள்ளும் சண்டைகள் வருவதில்லை. என்னவள் எனக்காக இதைச் செய்கிறாள் என்றுஅவனுமஇ; என்னவன் எனக்காகஎல்லாம் செய்கின்றான் என்றுஅவளும் உணர்ந்துகொள்வதேஇதன் ஆரம்பம்.
நானும் நிறையநேரங்களில் நினைப்பதுஉண்டு. நான் தான் எல்லாவற்றையும் துறக்கிறேன். ஆனால் எனக்காகஎதையும் விட்டுக் கொடுக்காதநிலைதான் மற்றவரிடம் உள்ளதுஎன்று. ஆனால் பிரான்சிஸ் அசிசியாரின் ஜெபத்தைவாசித்தபிறகுஇநான் என்னையேமாற்றிக் கொள்ளவேண்டுமென்றுநினைத்தேன். 
ஜெபத்தில் எனக்குமிகவும் பிடித்தவரிகள்: 'பிறர் என்னைப் புரிந்துகொள்ளவிரும்புவதைவிடஇநான் பிறரைப் புரிந்துகொள்ளவும்.... அன்பைப் பெறவிரும்புவதைவிடஇபிறருக்குஅன்பைஅளிக்கவும் எனக்குகற்றுத்தாரும்'
என் துறவறத்தைநான் இதிலிருந்துஆரம்பிக்கிறேன்.