வியாழன், 13 பிப்ரவரி, 2020

அடையாளப்படுத்த...

சேர்ந்து இருந்து
சண்டையிடும் அன்பும் உண்டு...

சண்டையிட்டு பிரிந்து
செல்லும் அன்பும் உண்டு...

தலைமயிர் கோதி
நெற்றி முத்தமிட்டு 
கொஞ்சும் அன்பும் உண்டு...

பொறுத்து வாழும் அன்பும் உண்டு...

பொறாமைப் பட 
வைக்கும் அன்பும் உண்டு...

தள்ளி வாழும் அன்பும் உண்டு...

தனியே விடா அன்பும் உண்டு...

தவிக்க விடும் அன்பும் உண்டு...

என்றும் இணைந்திருக்கும் அன்பும் உண்டு...

அலைபேசி வழி அன்பும் உண்டு...

முகம் காணா அன்பும் உண்டு...

கண்ணீர் சிந்தும் அன்பும் உண்டு...

கண்ணீர் வர வைக்கும் அன்பும் உண்டு...

கடமைக்கென்று அன்பும் உண்டு...

உரிமை கொடுக்கும் அன்பும் உண்டு...

உரிமை எடுக்கும் அன்பும் உண்டு...

உல்லாசப்படும் அன்பும் உண்டு...

உற்சாகப்படுத்தும் அன்பும் உண்டு...

அரவணைக்கும் அன்பும் உண்டு...

எந்த வகையில் அன்பு செய்தாலும்
அன்பு அன்பு தான்!!!

யாராலும் அழிக்க முடியா
அழகிய காவியம்!!!!

அனைவருக்கும் அன்பு தின வாழ்த்துகள்.

இனியபாரதி.

1 கருத்து:

சிவனேசன் சொன்னது…

அன்பின் தனித்துவத்தை இலக்கிய வடிவில் இவ்வளவு அழகாக யாராலும் கூற முடியாது....
ஜெனீயை நவீன யுகத்தின் ஔவையார் என்று கூறலாம்