தேடும் என் மனம்...
தீண்டலோ...
கொஞ்சலோ...
காயம் கொடுக்கவில்லை....
உன் அழகில் சிறிதும் குறைவு இல்லை...
நெஞ்சம் எல்லாம் நீயாக...
தேடி வந்தேன் தனியாக...
கேட்பதெல்லாம் ஒரு வரமே...
என் கருவாச்சி என்றும் என் சொந்தமே!!!
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
பிறர் தோட்டத்தில் பூக்கும் அழகிய மலரை விட
உன் தோட்டத்தில் பூத்த வாசம் குன்றிய மலரே
என்றும் உனக்குச் சொந்தம்!!!
இனியபாரதி.
அவன் இல்லையே என்று ஏங்கித் தவித்த அவளுக்கு ஆறுதலாய் இருந்தவைகள் வெகுசில....
அவளுக்கு எல்லாத் திறமைகள் இருப்பினும் இப்படித் திரிகிறாளே என்று பிறர் இட்ட சாபம்...
கேவலமாய் நோக்கிய சில பார்வைகள்...
உச்சி வெயிலிலும் இருளடைந்து தெரிந்த அருகாமைகள்....
இவை எப்படி ஆறுதல் தந்தன???
இவை எல்லாம் அவள் அடிமனதில் ஆழமாய் பதிந்திருந்த அவன் அன்பை
ஆணிவேரோடு பிடுங்கி எறிய
அவள் உள்ளத்தை ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தன....
இனியபாரதி.