செவ்வாய், 26 நவம்பர், 2013

கவிதை கவிதை....

காதல் தான் கொடுமை என்று சொன்னார்கள்...
இப்பொழுது 
காதலனும் கொடுமையாக இருக்கிறான் 

சனி, 23 நவம்பர், 2013

கவலை

வகுப்பில் ஆசிரியர் ஒருவர் தத்துவவியல் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். வகுப்பு முடியும் நேரம் ஒரு தத்துவம் சொல்லி விட்டு முடிக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு டம்ளரில் தண்ணீருடன் மாணவர்கள் முன் நிற்கின்றார்.
இதை நான் சிறிது நேரம் கையில் வைத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. இதையே நான் ஒரு மணி நேரம் பிடித்துக் கொண்டிருந்தால் என் கைதான் வலிக்கும். ஒரு நாள் முழுவதும் பிடித்துக் கொண்டிருந்தால் சிரமம் எனக்குத் தான்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், 
டம்ளர் என்பது நம் மனம்.
அதில் உள்ள தண்ணீர் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள். 
பிரச்சனைகளை தூக்கிக் கொண்டே திரிந்தால் நமக்குத் தான் வலிக்கும். மனம் சோர்வடையும். நம் பிரச்சனைகளை ஒரு இடத்தில் இறக்கி வைப்போம்.
நம் கவலைகளை மகிழ்ச்சியாக மாற்ற இறைவன் இருக்கிறான் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு பொழுதையும் மகிழ்வுடன் கழிப்போம்.

வியாழன், 14 நவம்பர், 2013

கோபம்

கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். அது எல்லாம் அந்தக் காலம். இப்பொழுது எல்லாம் கோபம் வந்தால்போதும், உடனே அதை யார்மீதாவது காட்டி விட வேண்டும். அது யார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்.
செய்திதாள்களில்எல்லாம் இப்பொழுது இதுபோல் நிறைய செய்திகள்வருவதுண்டு. தந்தை மகளைக் கொன்றான், மகன் தாயைக் கொன்றான் என்றெல்லாம்நிறைய செய்திகள் சகஜமாகி விட்டன.
கோபம் எதனால் வருகிறது என்றுஇன்று காலை ஒரு இரண்டுமணி நேரம் யோசித்திருப்பேன். என்கோபத்திற்குப் பதில் கிடைத்தது.
முதலில்நான் கோபப் பட ஆரம்பிப்பதுயாரால்? அநேகமாக நாம் அதிகம்நேசிப்பவர் நமக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்யும் பொழுதுநமக்குக் கோபம் வருகிறது. நாம்விரும்பும் பொருள் நமக்குக் கிடைக்காமல்நமக்கு அடுத்திருப்பவருக்குக் கிடைக்கும் தருணங்களில் கோபம் வருகின்றது.
ஒருவர்நம்மைப் புகழாமல் நம் எதிரியைப் புகழும்பொழுது, நாம் நினைக்கும் செயல்நடக்காத பொழுது, பணம் கையில்இல்லாத பொழுது என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
கோபப்படுவதால்பயன் என்ன என்று யோசித்தால்ஒன்றும் இல்லாமல் தான் இருக்கும். கோபத்தால்ஒரு பயனும் கிடையாது. நம்முடையசக்தி தான் வீணாகின்றது. தேவைஇல்லாத மன அழுத்தம், உடல்சோர்வு, விலை மதிப்பில்லா கண்ணீருக்குமதிப்பில்லாமல் போகின்றது.
என் அழகு கூட நான்கோபப் படுவதால் தான் குறைகிறது என்றுமருத்துவர்கள் கூறுகிறார்கள். கோபப்படுவதால் அழகு குறையும் என்பதுமறுக்க முடியாத அறிவியல் உண்மை.
சரி அது இருக்கட்டும். இனிஎன்னால் கோபத்தைக் குறைக்க முடியுமா?
முடியும்என்றால் முடியும்.
முடியாதுஎன்றால் முடியாது.
நான் இன்று முடிவெடுத்தேன், கோபத்தைக்குறைத்துக் கொள்ள வேண்டும் என்று.
இறைவா,நீரே எனக்குத் துணையாய்இருந்து என் கோபத்தைக் கட்டுப்படுத்தஉதவி செய்யும்.

நீங்கள்எப்பொழுது கோபத்தைக் குறைக்கப் போகிறீர்கள்?

புதன், 6 நவம்பர், 2013

Captured by me...

இறைவனின் படைப்பை ரசிக்க ஒரு யுகம் வேண்டும்...
அந்த யுகத்தில் 
நான் ரசித்த 
ஒரு அதிசயம் 
இந்த நத்தை....



இலையில் நீர்த்திவலைகள் உல்லாசமாய் அமர்ந்து கொண்டு 

யாரைப் பற்றி பேசுகின்றன?






எனக்கு எல்லாமுமாய் இருக்கும் என் இனிக்குட்டிக்கு சமர்ப்பணம்.


செவ்வாய், 5 நவம்பர், 2013

பண்டிகை அவசியமா?

தீபாவளித் திருநாள் கொண்டாட்ட உற்சாகத்தில் அனைவரும் இருப்போம். ஒரு வேளை உணவிற்குக் கூட கஷ்டப்படுகிறவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன் வரும் வழியில் ஜவுளிக் கடையில் கூட்டம் அலை மோதுவதைப் பார்க்கிறார். தன் இரண்டு பெண் குழந்தைகளையும் எண்ணிப் பார்க்கின்றார்.  அமுதா இது போல தான் டிரஸ் வேணும்-னு கேட்டாள். ஆனால், அவ்வளவு பணத்திற்கு நான் எங்கு போவேன்?  நல்ல வேளை, நம் மனைவி, நம் நிலைமையைப் புரிந்து கொண்டாள் போல. அவள் வீட்டு வேலை செய்யும் இடத்தில் அவளுக்குக் கொடுத்த சேலையில் இரண்டு பிள்ளைகளுக்கும் பாவாடை,சட்டை தைத்து விட்டாள். மனதில் ஏக்கத்துடன் நகர்ந்து செல்கிறார்.


மனைவி, வீட்டருகில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டுப் பெண்கள், தங்கள் பெருமை பற்றிப் பேசிக் கொண்டும், பண்டிகை கொண்டாட்டத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்.
தனக்கும்இது போல் வாழ்க்கை அமையப்போவது எப்போது என்ற ஏக்கத்துடன்மனைவி அந்த இடத்தை விட்டுநகர்கிறாள்.
கணவன்வீட்டிற்குள் நுழைந்தவுடன், பிள்ளைகள் ஓடிச் சென்று, "அப்பாஎப்போது எங்களுக்கு பட்டாசு வாங்கித் தருவீர்கள்?" என்று கேட்கின்றனர்.
நாளைக்குதான தீபாவளி, நாளைக்கு வாங்கித் தர்றேன்-னு சொல்லிட்டுவெளியில் சென்று விடுகிறார்.
கையில்ஒரு பைசா கூட  இல்லை. குழந்தைகளுக்கு எப்படிபட்டாசுகள் வாங்குவது என்று யோசித்துக் கொண்டேவீதியோரம் நடந்து செல்கின்றார். சாலையைக்கடக்க முயன்ற அந்த நொடி, எதிர்பாராத விதமாக, கார் மோதி, சாலையின் மறுபக்கம் தூக்கி எறியப்படுகிறார்.
செய்திமனைவியின் காதில் விழ, அலறிஅடித்துக்கொண்டு ஓடுகிறாள். குழந்தைகள், நிலை அறியாது, அழுதுகொண்டே தாயின் பின் செல்கின்றனர்.
யாரோ ஒரு புண்ணியவான், கணவனைஅரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தான்.
அழுகையின்உச்ச நிலையில் இருந்தவள்,கணவனைக் கண்டவுடன் ஓரளவுஆறுதலடைந்தாள்.
குழந்தைகளும்தந்தையைக் கண்டவுடன், மகிழ்ச்சியில் "அப்பா" என்று அருகில் சென்று,
"அப்பாஎங்களுக்கு பட்டாசு எல்லாம் வேண்டாம். நீங்கள் சுகம் அடைந்தால் அதுவேஎங்களுக்குப் போதும்" என்று சொல்கின்றனர்.
பிள்ளைகள்பேசுவதைக் கண்ட பெற்றோர்கள் ஆனந்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.
தங்கள்வறுமையை எண்ணி சிரிப்பதா?
அழுவதா?
இப்படிவறுமையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஒருவித கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலையில் பொருள் வசதி படைத்தவர்கள்ஆடம்பரமாகப் பண்டிகைகள் கொண்டாட நினைப்பது நியாயமா?

தங்கள்பொருளில் பாதியை இது போன்றஏழைகளுடன் பகிர்ந்து கொண்டு, விழாக்களைக் கொண்டாடிப்பாருங்கள்.

விழாக்கள்அர்த்தமுள்ளதாய் அமையட்டும்.



வியாழன், 31 அக்டோபர், 2013

வெற்றுப் பாத்திரம்

ஒரு நாள்
பேராசிரியர் பெரிய, வெற்று கண்ணாடிக் குடுவை மற்றும் சில பாத்திரத்தில் கற்கள், மணல் என்று எடுத்துக் கொண்டு வகுப்பிற்குள் நுழைகிறார்.  பேராசிரியர் வகுப்பில் நுழைந்தவுடன் மாணவர்கள் அவரின் கைகளில் இருந்த பொருட்களைப் பார்த்து நகைத்தனர்.
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு வகுப்பு தொடங்குகிறது.
ஆசிரியர், பெரிய பெரிய கற்களைக் கொண்டு பாட்டிலை நிரப்புகிறார். நிரம்பியதும், மாணவர்களிடம்,
"இந்தப் பாத்திரம் நிரம்பி விட்டதா?" என்று கேட்கின்றார்.
"ஆம்" என்று பதில் மொழி கிடைக்கின்றது.
பின், சிறிய கற்களை பாட்டிலில் போடுகின்றார். அந்த சிறிய கற்கள் பெரிய கற்களால் அடைக்க முடியாத இடத்தை அடைத்தன.
இப்பொழுதும் மாணவர்களிடம் அதே கேள்வி.
"இந்தப் பாத்திரம் நிரம்பி விட்டதா? " - ஆசிரியர்.
"ஆம்" - மாணவர்கள்.
பின், கொண்டு வந்த மணலைப் பாட்டிலில் போடுகின்றார். மணலானது பாட்டிலின் எஞ்சிய இடத்தை அடைத்தது.
இப்பொழுதும் மாணவர்களிடம், "பாட்டில் நிரம்பியுல்லதா? " என்கிறார்.
மாணவர்கள் விரக்தியுடன் ஆம் என்கின்றனர்.
அடுத்ததாக,
நீரை எடுத்து பாட்டிலில் ஊற்றுகிறார். மணல் நீரை உறிஞ்சுகிறது. இப்பொழுதும் பாட்டில் நிரம்பித்தான் இருக்கிறது.
மாணவர்களுக்கு பொறுமை இல்லை.
"இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க சார்?"
இந்த வெற்று பாட்டிலின் மூலம் நாம் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பாத்திரம் உன் வாழ்க்கையைக் குறிக்கிறது.
பெரிய கற்கள் குறிப்பது
உன் குடும்பம்
குழந்தைகள்
நண்பர்கள்
மற்றும்
உடல் நலம்
இந்தச் சிறு கற்கள் குறிப்பது
உன் வேலை, வீடு, வாகனம் போன்ற தேவைகள்
மணல் உணர்த்துவது உன்னுடைய மற்ற சிறு சிறு தேவைகள்.
நீ முதலாவது, மணலைக் கொண்டு பாட்டிலை நிரப்பி இருந்தால், கற்களை நிரப்ப இடம் இருந்திருக்காது. வாழ்விலும் இதே நிலை தான்.
நீ உன்னுடைய நேரத்தையும், திறனையும் சிறிய காரியங்களுக்காக செலவிட்டால், உன்னை மகிழ்விக்கக் கூடிய பெரியவற்ற்றில் உன்னால் ஈடுபாடு செலுத்த முடியாது
குழந்தைகளுடன் விளையாடுங்கள்.
இரவு உணவை நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் உண்ணுங்கள்.
குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். மனைவி, கணவருடன் மனம் விட்டு பேசுங்கள்.
பெரிய காரியங்களான இவற்றிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
பின்
மணலைப் போன்ற சிறிய காரியங்களை நிரப்ப இடம் கிடைக்கும்.
எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நீங்களே தீர்மானியுங்கள்.
மற்றவை எல்லாம் வெறும் மணல் தான்.
ஒரு மாணவன் ஆசிரியரிடம்,"அப்போ தண்ணீர் எதற்கு ஊற்றுனீர்கள்?"
நீ எதைக் கொண்டு நிரப்பி விட்டும், தண்ணீரை உற்றினால் அதை நீர் ஏற்றுக் கொள்ளும்.
அதைப் போலத் தான் மற்ற எதைப் பற்றியும் நீ கவலைப்படத் தேவை இல்லை.
நீ முதலில் எதைக் கொண்டு பாட்டிலை நிரப்புகிறாய் என்பதைப் பொறுத்து தான் அடுத்த நிலை அமைகின்றது.
உன் வாழ்வின் ஒவ்வொரு நொடியும், உனக்காக உருவாக்கப் பட்டது.
உனக்கு அளிக்கப்பட்ட கொடை.
அதை நன்றாகப் பயன்படுத்துங்கள்.
இது தான் இந்தப் பொருட்கள் நமக்கு உணர்த்தும் பாடம்.
பெரிய காரியங்களாக நம் வாழ்வில் நினைக்கும் சில விஷயங்கள் உண்மையில் சிறியவையாக இருக்கும்.
இதனால்
உண்மையில் பெரிய காரியங்கள் எதுவென்று யோசிக்க வேண்டும்.
மனதின் எண்ணங்களுக்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.
பெரும்பாலும்  சாதித்தவர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் தோற்று விடுகிறார்கள்.
வாழ்க்கையில்  ஜெயித்தவர்கள் தான் உண்மையாகவே வெற்றி கண்டவர்கள்.

கை தட்டலுடன் அன்றைய வகுப்பு முடிகிறது.

புதன், 23 அக்டோபர், 2013

கல்வியே செல்வம்

பள்ளியில் நாம் படிக்கும் போது, நம் வகுப்பில் சிறந்த மாணவரிடம் தான் நாம் நன்றாகப் பழக வேண்டும் என்று நினைப்போம். அவருடன் சண்டை வந்தால் கூட, நாம் சீக்கிரம் சமரசம் செய்து கொள்வோம். அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதற்கு முக்கிய காரணமே, அவர் நன்றாகப் படிப்பது தான்.

இவ்வாறு பள்ளியில் ஆரம்பிக்கும், படித்தவர்களின் நட்பு என்ற ஒன்று, கல்லூரிகளிலும் இருக்கிறதா என்றால், இல்லை என்று தான் சொல்வேன்.  கல்லூரியைப் பொறுத்தவரை, வகுப்பில் 30 பேர் இருப்பார்கள். வகுப்பில் உள்ள 30 பேரும் நல்ல தோழமையுடன் தான் இருப்பார்கள். ஆனால், இங்கு பேராசிரியர்கள் பாகுபாடு பார்ப்பார்கள். நன்றாகப் படிக்கிற மாணவரிடம் தான் அனைத்து வேலைகளையும் செய்யச் சொல்வார்கள். நமக்கே inferiority complex(தாழ்வு மனப்பான்மை) யை வரச் செய்து விடுவார்கள். அப்பொழுது தான் நமக்குத் தோணும், நாமும் நன்றாகப் படித்திருக்கலாமோ என்று! இவ்வாறு, சிலருக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிற, படிப்பு என்கிற விஷயம், வேலை பார்க்கும் இடங்களிலும், நம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது.

ஆகவே, கல்வி தான் மிக முக்கியமான ஒன்று. படித்தவர் என்றால், எப்பொழுதும் தனி மரியாதை தான். படிப்பிற்கு முதலிடம் கொடுப்பவர்கள் நம்மில் அநேகம். கல்வியின் முக்கியத்துவத்தை நாம் உணர்வதோடு, அறியாமையில் இருப்பவர்களுக்கும் நாம் தான் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அநேக இடங்களில், கற்பதற்கு இடங்கள் இருக்கின்றன. ஆனால், சரியான கல்வி முறை அமைவதில்லை. நாம், கற்கும் கல்வியானது, நமக்கு ஞானத்தையும், அறிவையும் புகட்ட வேண்டும். வெறும் அறிவு மட்டும் கல்வியாகாது.  ஞானமும் வேண்டும். ஞானம் என்றால், ஏதோ அறிஞரிடமும், விஞ்ஞானிகளிடமும் இருந்து கிடைப்பது இல்லை. நம்மில் இருக்கும் அறிவை, சரியான இடத்தில், சரியான நேரத்தில் உபயோகிப்பது தான் ஞானம். ஞானத்தை விவேகம் என்று கூட சொல்லலாம். இவ்வாறு, நல்ல ஞானத்தையும், அறிவையும் கொடுக்கக் கூடிய கல்வியே சிறந்த செல்வம்.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

புள்ளி - கோடு

சமீபத்தில் என் நண்பர் ஒருவர்   எழுதிய புள்ளி, கோடு பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன். அழகாக, அருமையாக இருந்தது, அவருடைய எண்ணங்கள்.
நண்பரின் வரிகள்
"புள்ளி ஒன்றின் வசீகரத்தில் மயங்கி அதைக் காதலிக்கத் தொடங்குகிறது ஒரு நேர்கோடு. புள்ளிக்கோ கோட்டினைப் பிடிக்கவேயில்லை. கோடு என்பது மந்தமான, செயலற்ற, பிடிவாதமான ஒன்று என நினைக்கிறது புள்ளி. கோடாக இருப்பதில் தனித்துவமில்லை என்று அதைக் கண்டுகொள்ள மறுக்கிறது புள்ளி. புள்ளியைக் கவர்வதற்காக பல்வேறு வடிவங்களில் தன்னை வளைக்கின்றது கோடு. முன்பின் ஆடுகின்றது. தன்னையே வளைக்கின்றது. எப்படியாவது புள்ளியை கரெக்ட் பண்ண நினைக்கிறது கோடு. இந்த விளையாட்டில் புள்ளி என்பது அசைவில்லாத, தன்னை மையப்படுத்திக் கொள்கின்ற உளவியல் கூறு என்றும், கோடு என்பது நமது மாறக்கூடிய தன்மை என்றும் நமக்குப் புரிகிறது. மாறாத கடினத்தன்மை புள்ளி. மாறுகின்ற நெகிழ்வுத்தன்மை கோடு. இந்தக் காதல் நாடகத்தின் முடிவில் புள்ளி கோட்டினை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அத்துடன் கோட்டின் வளர்ச்சி நின்றுவிடுகிறது. "

"கோட்டின் வளர்ச்சி அத்துடன் நின்று விடுகிறது" - எதார்த்த வரி.
ஆனால், இது மிகப் பெரிய அர்த்தங்களைத் தருகிறது. ஒரு புள்ளியிலிருந்து மறு புள்ளியை அடைவதுடன், ஒரு கோட்டின் வளர்ச்சி நின்று விடுகிறது.

கோடானது ஒரு பெண் என்று வைத்துக் கொள்வோம். ஒரு புள்ளி, தன் வீடு.  மறுபுள்ளி, தான் காதலிப்பவன்(கணவன்). தன் வீட்டில் இருக்கும் போது, சுதந்திரமாக, எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஏன் என்றால், முடிவுப்புள்ளி நமக்குத் தெரிவதில்லை.

முடிவுப்புள்ளி தெரிந்ததும், இரு புள்ளிகளுக்கு இடையில் மாட்டிக்கொள்கிறது கோடு.
அதாவது, பெண்ணானவள் தன் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையில் மாட் டிக்கொள்கிறாள். இரண்டு புள்ளிகளை மீறி வேறு எங்கும் செல்ல முடியாது. இந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையில்,அது எவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறதோ, அவ்வாறெல்லாம் இருக்கலாம். அது தான் அழகும் கூட. ஏதோ என் நண்பன் எழுதியதைப் பார்த்ததும் யோசித்தேன். 
இதைப் பற்றி யோசிக்கும் போது நிறைய எண்ணங்கள் மனதினுள் ஓடும்.

யோசிக்கத் தூண்டிய நண்பருக்கு நன்றி!!!

புள்ளி கோடு புள்ளி

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

மௌனம்

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சொல்வார்கள். “மௌனம்” என்ற வார்த்தையை கேட்டவுடன், மனதிற்குள் அமைதி  எழுகின்றது. மௌனம், தன்னுள் பல அர்த்தங்களைக் கொண்டுள்ளது. மௌனம், அது உணரப்படும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது.
சாதாரணமாக, சிலர் எப்பொழுதும் மௌனமாகவே இருப்பர், வேறு சிலர் துன்பம், துயரம் வரும்போது மட்டும் மௌனம் காப்பர், இன்னும் சிலர் கோபத்தை மௌனத்தால் வெளிக்கொணர்வர்.
மௌனம் பொதுவாக பெண்மைக்கு அழகு என்பர். மௌனத்தில் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது. மௌனம் சில நேரம் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. சில நேரம் கஷ்டங்களை தருகின்றது. நமக்கு பிடித்தவர் நம்முடன் பேசாமல் இருந்தால், நம் மனம் படும் பாடு சொல்லி அடங்காது. மௌனம் சில நேரம் மனிதனை கொன்று விடுகிறது.
அமைதியான கடற்கரையில், மௌனம் இனிமையானதாக இருக்கும். இயற்கையை ரசிக்கும் போது மௌனம் சந்தோசத்தை தரும். குழந்தையின் தூக்கத்தை ரசிக்கும் போது மௌனம் இனிமை. வகுப்பறையில் மௌனம் கொடுமை. சண்டையில் மௌனம் சமரசத்திற்கு வழி வகுக்கும்

மௌனத்தை ஓசையற்ற,அடக்கமான,மறைத்து வைத்த,நிசப்தமான, அமைதியான என பல நிலைகளில் உணரலாம். மௌன மொழி, காதலில் அதிகம். மௌனம் தமிழில் அழகான வார்த்தை. நம் வாழ்விலும் மௌனம் முக்கிய பங்காற்ற நாம் முன் வருவோம்.