வியாழன், 14 நவம்பர், 2013

கோபம்

கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். அது எல்லாம் அந்தக் காலம். இப்பொழுது எல்லாம் கோபம் வந்தால்போதும், உடனே அதை யார்மீதாவது காட்டி விட வேண்டும். அது யார் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்.
செய்திதாள்களில்எல்லாம் இப்பொழுது இதுபோல் நிறைய செய்திகள்வருவதுண்டு. தந்தை மகளைக் கொன்றான், மகன் தாயைக் கொன்றான் என்றெல்லாம்நிறைய செய்திகள் சகஜமாகி விட்டன.
கோபம் எதனால் வருகிறது என்றுஇன்று காலை ஒரு இரண்டுமணி நேரம் யோசித்திருப்பேன். என்கோபத்திற்குப் பதில் கிடைத்தது.
முதலில்நான் கோபப் பட ஆரம்பிப்பதுயாரால்? அநேகமாக நாம் அதிகம்நேசிப்பவர் நமக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்யும் பொழுதுநமக்குக் கோபம் வருகிறது. நாம்விரும்பும் பொருள் நமக்குக் கிடைக்காமல்நமக்கு அடுத்திருப்பவருக்குக் கிடைக்கும் தருணங்களில் கோபம் வருகின்றது.
ஒருவர்நம்மைப் புகழாமல் நம் எதிரியைப் புகழும்பொழுது, நாம் நினைக்கும் செயல்நடக்காத பொழுது, பணம் கையில்இல்லாத பொழுது என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
கோபப்படுவதால்பயன் என்ன என்று யோசித்தால்ஒன்றும் இல்லாமல் தான் இருக்கும். கோபத்தால்ஒரு பயனும் கிடையாது. நம்முடையசக்தி தான் வீணாகின்றது. தேவைஇல்லாத மன அழுத்தம், உடல்சோர்வு, விலை மதிப்பில்லா கண்ணீருக்குமதிப்பில்லாமல் போகின்றது.
என் அழகு கூட நான்கோபப் படுவதால் தான் குறைகிறது என்றுமருத்துவர்கள் கூறுகிறார்கள். கோபப்படுவதால் அழகு குறையும் என்பதுமறுக்க முடியாத அறிவியல் உண்மை.
சரி அது இருக்கட்டும். இனிஎன்னால் கோபத்தைக் குறைக்க முடியுமா?
முடியும்என்றால் முடியும்.
முடியாதுஎன்றால் முடியாது.
நான் இன்று முடிவெடுத்தேன், கோபத்தைக்குறைத்துக் கொள்ள வேண்டும் என்று.
இறைவா,நீரே எனக்குத் துணையாய்இருந்து என் கோபத்தைக் கட்டுப்படுத்தஉதவி செய்யும்.

நீங்கள்எப்பொழுது கோபத்தைக் குறைக்கப் போகிறீர்கள்?

கருத்துகள் இல்லை: