சனி, 23 நவம்பர், 2013

கவலை

வகுப்பில் ஆசிரியர் ஒருவர் தத்துவவியல் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். வகுப்பு முடியும் நேரம் ஒரு தத்துவம் சொல்லி விட்டு முடிக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு டம்ளரில் தண்ணீருடன் மாணவர்கள் முன் நிற்கின்றார்.
இதை நான் சிறிது நேரம் கையில் வைத்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. இதையே நான் ஒரு மணி நேரம் பிடித்துக் கொண்டிருந்தால் என் கைதான் வலிக்கும். ஒரு நாள் முழுவதும் பிடித்துக் கொண்டிருந்தால் சிரமம் எனக்குத் தான்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால், 
டம்ளர் என்பது நம் மனம்.
அதில் உள்ள தண்ணீர் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள். 
பிரச்சனைகளை தூக்கிக் கொண்டே திரிந்தால் நமக்குத் தான் வலிக்கும். மனம் சோர்வடையும். நம் பிரச்சனைகளை ஒரு இடத்தில் இறக்கி வைப்போம்.
நம் கவலைகளை மகிழ்ச்சியாக மாற்ற இறைவன் இருக்கிறான் என்ற எண்ணத்துடன் ஒவ்வொரு பொழுதையும் மகிழ்வுடன் கழிப்போம்.

கருத்துகள் இல்லை: