புதன், 31 மார்ச், 2021

வேண்டுமென்று...

காரணம்

அறிய வேண்டுமென்று

நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும்

தனிமையைக் கொடுக்குமே தவிர

அன்பை அல்ல...

இனியபாரதி. 

செவ்வாய், 30 மார்ச், 2021

யூகிக்க முடியாதவை...

நடப்பதும்

நடக்க இருப்பதும்

நம்மால் யூகிக்க முடியாதவை...

நடப்பதை

நடப்பது போல்

விட்டு விடுவதே நலம்

நடக்க இருப்பது

நல்ல முறையில் நடக்கும் என்ற நம்பிக்கையுடன்....

இனியபாரதி. 

திங்கள், 29 மார்ச், 2021

வியப்பே...

அவளின் ஒவ்வொரு செயலும் 

வியப்பே தந்தாலும்,

அச்செயலின் மையம்

அவனாக இருக்கும் போது

கவலை கொள்ளாமல் இருக்கலாம்...

இனியபாரதி. 

ஞாயிறு, 28 மார்ச், 2021

இருக்கலாம்...

ஒன்று தான் என்று

புரிந்து கொள்ளாத தருணங்கள்...

பின்பு புரிந்து கொள்வதற்குக்

காரணங்களாகவும் இருக்கலாம்,

பிரிந்து செல்லக்

காரணங்களாகவும் இருக்கலாம்.

இனியபாரதி. 

சனி, 27 மார்ச், 2021

எல்லாம் அவன் செயல்...

எப்படி எல்லாம் ஏமாற்ற முடியும் என்று

ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருப்பான் போல....


அவன் எண்ணப்படி

எல்லாம் நடந்தேறி

இறுதி நிலையில்

முழுமையாய் துரத்திவிட்டான்

அவன் உலகினின்று...

இனியபாரதி. 


வெள்ளி, 26 மார்ச், 2021

குறைந்து விட்டன...

அவளுடன் உறவாடும்

நேரம் மட்டும் குறையவில்லை...

ஆனால்

அவளுக்கு

அவன் மீதான 

அன்பும்

பாசமும்

அக்கறையும் மட்டும் குறைந்து விட்டன...

இனியபாரதி. 



வியாழன், 25 மார்ச், 2021

உன்னைச் சரணடைந்தேன்...

என் பணி

உன் அடி பணிந்து கிடப்பதே...

அதை அன்றி

வேறென்ன வேண்டும் 

என் வாழ்வில்???

இனியபாரதி. 

புதன், 24 மார்ச், 2021

தழுவி நின்ற நான்....

நிஜமாய்

நின்ற அவள்!!!

அந்த நிஜத்தைத்

தழுவி நின்ற

நான்...

இனியபாரதி. 

அவசரம்...

அவசரம்

என்ற வார்த்தை 

கொஞ்சம் அவசரப்படாமல்

நம் வாழ்வில்

வரும் போது

நம் வீணான அவசரங்களும்

தவிர்க்கப்படுகின்றன...

இனியபாரதி. 

செவ்வாய், 23 மார்ச், 2021

நிஜமாய்...

நிழல் என்று மட்டும் எண்ணி

நின்று விட முடியாது...

நிழலாய் நின்றவள்

நிஜமாய் 

மனத்தின் ஆழத்தில்

ஓர் இடம் பிடித்து

அழகாய் அமர்ந்திருப்பாள்....

அவளை

மறக்கவும் முடியாது...

நினைக்காமல் இருக்கவும் முடியாது...

இனியபாரதி. 


ஞாயிறு, 21 மார்ச், 2021

முடிவும் அவளே...

ஒரு புதிய பாதையின்

தொடக்கமாய் இருந்தவள்...

இன்று

அதே பாதையின் 

முடிவாய் நிற்கிறாள்...

விடை பெற்றுச் செல்வதா???

தழுவி அணைத்துக் கொள்வதா???

இனியபாரதி. 

சனி, 20 மார்ச், 2021

எல்லாம் அறிந்தவன்....

அவளின் அந்த ஒலி

அவன் காதுகளுக்குள் மட்டும் ஒலிக்கும்...

அவளின் அந்த மெளனம்

அவன் மனதை மட்டும் வருடும்...

அவளின் அந்த சிரிப்பு

அவன் உள்ளம் மட்டும் அறியும்...

அவளின் அந்த வாசம்

அவன் நாசி மட்டும் துளைக்கும்...

அவளின் அந்தப் பார்வை

அவன் கண்கள் மட்டும் அறியும்...


இனியபாரதி. 



வெள்ளி, 19 மார்ச், 2021

வரம்...

இருக்கும் சில நல்ல பண்புகளை

எப்படி உபயோகித்தாலும்

மற்றவர்களுக்கு நன்மை கிடைப்பதே

ஒரு வரம் தான்....

இனியபாரதி.

வியாழன், 18 மார்ச், 2021

கருநீல மேகம்...

அவள் கருத்திருக்கக் காரணம்

மகிழ்ச்சி அல்ல

மனவருத்தம்!!!


இனியபாரதி. 

புதன், 17 மார்ச், 2021

என் எண்ணங்கள்...

இனிப்பும் கசக்கும் காலம் வரும்...

அது

அந்தப் பண்டங்களின் தவறல்ல...

என் எண்ணங்களின் தவறு...

இனியபாரதி.

செவ்வாய், 16 மார்ச், 2021

தேவதை...

என் தேவதை அருகினில்

என்றும் என் இருப்பு

காட்டும் என் அன்பை!

அன்பு மட்டுமே ஆணிவேராய்

அவள் அருகில்

என்றும் உணர...

இனியபாரதி. 




திங்கள், 15 மார்ச், 2021

அம்மா...

அம்மா...

என்ற வார்த்தை எனக்குள் உணர்த்துவது...

ஒரு தாரக மந்திரம்...

ஒரு நல்ல மருத்துவம்...

ஒரு நல்ல வாழ்க்கை...

ஒரு நல்ல உயிர்...

ஒரு நல்ல தோழி...


இனியபாரதி. 


ஞாயிறு, 14 மார்ச், 2021

என்றுமாக...

என் எல்லாமுமாக

என்னுடன்

எனக்காக

என்றும்

இருப்பவள்...

"அவள் மட்டுமே...."


இனியபாரதி. 

சனி, 13 மார்ச், 2021

என்றும் துணையாக...

எல்லாவுமாய் அவளால்

இருக்க முடியும் என்பதை

உணரும் ஒவ்வொரு நொடியும்,

மனதில் ஏதோ ஒரு

இனம் புரியா மகிழ்ச்சி....

இனியபாரதி.

வெள்ளி, 12 மார்ச், 2021

மொட்டு...

மொட்டு

ஒருநாள்

அழகான பூவாய் 

மலரும் என்ற 

நம்பிக்கையில் தான்

தலை குனிந்து வாழ்கிறது....

இனியபாரதி. 

வியாழன், 11 மார்ச், 2021

காலம் கழிகின்றது...

எதிர்பார்த்துக் காத்திருந்த

நாட்கள் எல்லாம்

கனவாய் போக...

எல்லாம் முடிந்துவிட்ட

இந்த நாட்கள் மட்டுமே

நிரந்தரம் என்று

காலம் கழிகின்றது...

இனியபாரதி. 

புதன், 10 மார்ச், 2021

மழையால் மகிழ்வு...

 எங்கிருந்து வருகிறாய்

என்று எண்ணும் போதே

எனக்குள் ஓர் சிலிர்ப்பு...


வந்ததும் மனதில் ஒரு மகிழ்ச்சி...

என் மீது நீ உரசும்

ஒவ்வொரு நொடியும் 

ஏதோ ஒரு சலனம்...


மகிழ்ச்சியும் தருகிறாய்...

குளிர்ச்சியும் தருகிறாய்...


உன்னைப் பின் தொடர

முடியவில்லை என்றாலும்

முழுமையாய் அனுபவிக்கிறேன்

ஒவ்வொரு பொழுதும்...


நீ அழகானவள்...

அமிர்தமானவள்...

ஆசையாய் அள்ளி அணைக்க

ஏக்கமாய் நான் இருக்க

எனக்காய் அடிக்கடி 

மின்னல் ஒளி தந்து மகிழ்விக்கிறாய்!!!


இனியபாரதி.

செவ்வாய், 9 மார்ச், 2021

அவனும் அவளும்...

தன்னிலை

மறவாமல்

இருக்கும்

அவள்...

அவளை

மறக்க வைத்த

அவன்!!!


இனியபாரதி. 

திங்கள், 8 மார்ச், 2021

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளுடன்....

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்

இந்த வாழ்க்கைப் போராட்டத்தில்

எப்படியாவது ஜெயித்துவிடலாம்

என்ற நம்பிக்கையில் மட்டுமே

பல பெண்களின் வாழ்க்கை

ஓடிக் கொண்டிருக்கிறது....

பெண் உயிர் கொடுப்பவள்...

எதையும் சாதிக்கத் துணிந்தவள்...

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளுடன்....

இனியபாரதி. 

ஞாயிறு, 7 மார்ச், 2021

சுகம்தான்...

எங்கு இருந்தாலும்

மனம் மட்டும் 

என்றும் அவளை நினைக்கும்

ஒரு வாழ்க்கை 

சுகம்தான்...

இனியபாரதி. 

சனி, 6 மார்ச், 2021

காவியக் காதல்...

காவியக் காதல் படைக்க

பத்து வருடம் மிகக் குறைவு...

ஐம்பது வருடம் என்பது

எண்ண இயலாதது...

அப்படிப் படைக்கப்பட்ட காதல் அரிது!!!

அந்தக் கதையில் வந்த 'வெள்ளையன் மீனாட்சி' போல...

நன்றி மாறா...

இனியபாரதி. 

வெள்ளி, 5 மார்ச், 2021

எல்லை உண்டு...

அவளின்

ஆசைக்கும்

அடக்கத்திற்கும்

ஒரே ஒரு ஒற்றுமை தான்..


இரண்டிற்கும் ஒரு எல்லை உண்டு.

இனியபாரதி. 

வியாழன், 4 மார்ச், 2021

உம் பாடலின் அழகோ அழகு...

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ


சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்


சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

மகாகவி பாரதியார்.

புதன், 3 மார்ச், 2021

வாய்ப்பு இல்லை...

என் கண்ணீரும்

மெளனமும்

ஏற்படுத்தாத தாக்கத்தை

எப்படி என் அன்பு ஏற்படுத்தி இருக்கும்?

இனியபாரதி. 

செவ்வாய், 2 மார்ச், 2021

வானவில்லாய்...

வானவில்லாய் வந்த அவன்

சிறிது நேர இன்பம் தந்து

இருந்த இடம் தெரியாமல் 

மறைந்து விடுகிறான்...

அவன் வருகை எதிர் பார்த்து

அடுத்த மழைக்காய்

காத்திருக்கத் தான் வேண்டும்...

இனியபாரதி. 

திங்கள், 1 மார்ச், 2021

என் இனியவளே...

கண்ணுக்கு இனிய என்

கன்னிப் பூவே...

உன் வாசம்....

என்னைத் தவிர வேறு யார் அறிவார்?

உன் மெளனத்தின் அர்த்தம் கூட அறிவேன்...

உன் மகிழ்ச்சியின் காரணம் கூட அறிவேன்...

நீ

என்றும் என் அருகில்...

எனக்கானவளாய்

எனக்கு மட்டும் சொந்தமானவளாய்

என்றும் என்னுடன்....

இனியபாரதி.