துக்கத்தின் அடையாளமாக இருக்கும் கருமை நிறம், தன்னுள் பல நல்ல குணங்களைக் கொண்டுள்ளது. கருப்பு எனக்கு வெறுப்பு... எனக்கு பிடிக்காது என்று பல காரணங்கள் சொல்லலாம். கருமை நிறம் நம் வாழ்வோடு ஒன்றி விட்ட ஒரு நிறம்.
பிறந்த குழந்தை, முதன்முதலாக தன் அன்னையைப் பார்க்கும் அந்தக் கண்ணின் கருவிழி கருமை நிறம் தான். பெண்களின் மேனிக்கு அழகூட்டும் வைரம் மண்ணில் இருந்து கிடைக்கும் போது கருமை நிறம் தான்.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் விவசாயி கருமை நிறம் தான். பொதுவாக ஆடைகளில் விரும்பி அணியப்படும் நிறம் கருமை தான்.
பெண்களின் கூந்தல் நிறம் கூட கருமை தான். இயல்பாக கருமை நிறம் பிடித்தவர்களிடம் மன உறுதி, பலம், நேர்மறையான குணங்கள், புத்திக்கூர்மை இருப்பதைக் காணலாம்.
கருமை கண்ணுக்கு குளுமை... கருமை நிறத்தின் பெருமையை உணர்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக