திங்கள், 22 ஜூலை, 2013

வாழ்வில் இனிமை வழங்கும் கனியே...

நம் வாழ்வில், நாம் இனிமை என்று நினைப்பது, சந்தோஷமான தருணங்களை , நமக்கு பிடித்தவருடன் இருக்கும் நேரங்களை, நம் விருப்பம் நிறைவேறும் சமயங்களை, வெற்றி பெறும் நேரங்களை மட்டுமே...

ஆனால், நம் வாழ்வை இனிமையாக்குவது, நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் தான்.மரத்தில் இருக்கும் காயானது, கனியாகும் பொழுது தான் நம்மால் சுவைக்க முடிகிறது. வாழ்வில் வரும் ஏமாற்றங்களையும், தோல்விகளையும் ஏற்றுக்கொண்டு வாழும் பொழுது தான் வாழ்வென்ற கனியை நம்மால் சுவைக்க முடியும்.

கருத்துகள் இல்லை: