முதல் சந்திப்பு
முக்கியமானதாய் படவில்லை...
இரண்டாம் மூன்றாம் சந்திப்புகள் கூட
அப்படித் தான்...
என்றோ ஒரு சந்திப்பில்
தோன்றிய சிறு சினேகம்....
இருவருக்கும் ஏற்பட்டிருக்க
வாய்ப்புண்டு....
சலனமோ சஞ்சலமோ இல்லை.
'சினேகம் மட்டுமே...'
உடலால் அருகில் இல்லை...
மனங்கள் மிக அருகில்...
காத்திருப்பு...
தேடல்...
ஆர்வம்...
ஆசை...
சில நிமிடங்கள் கிடைத்தால் கூட
கால்கள் விரையும்...
அன்பா என்று தெரியவில்லை...
ஆனால்
அங்கு ஏதோ ஒரு நல்ல மனம் இருந்ததை உணர முடிந்தது...
வாழ்க்கை ஓட்டத்தின் கட்டாயத்தில்
பிரிந்து சென்றாலும்
அது ஒரு பெரிய தடையாக இல்லை...
காலம் வரும் என்று காத்திரு...
பிரிவு ஒரு குறை இல்லை என்பதை உணர...
இனியபாரதி.