என் வாழ்வில் இனிமையை கொடுக்கும்
இத்தண்ணீரின் மதிப்பு
சிந்திய பின்பு தான் தெரிந்தது...
தண்ணீருக்கு இருந்த மதிப்பை விட...
என் அன்பிற்கு இருந்த மதிப்பு அதிகம் என்று....
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
என் வாழ்வில் இனிமையை கொடுக்கும்
இத்தண்ணீரின் மதிப்பு
சிந்திய பின்பு தான் தெரிந்தது...
தண்ணீருக்கு இருந்த மதிப்பை விட...
என் அன்பிற்கு இருந்த மதிப்பு அதிகம் என்று....
இனியபாரதி.
அவள் காண்பது கனவு என்று
உணரும் முன்னரே
அவன் மறைந்து விடுகிறான்....
கனவில் கண்டவன்
நேரில் வந்தாலும்
அடையாளம் தெரியாத அபலைப் பெண் அவள்...
அவள் அன்றிரவு சூடிய மல்லிகைக்கே
அவளின் நிலை புரியும்!!!
இனியபாரதி.
கலக்கமுற்றாலும் கண் கலங்க மாட்டேன்...
உம் இரு கைகளும் என்னைத் தாங்கிக் கொள்ள இருப்பதால்...
வேதனை உற்றாலும் வெட்கம் அடைய மாட்டேன்...
உம் அன்பு என்னைக் களிப்படையச் செய்வதால்...
என்றும் இனிமையை உணர்கிறேன் உம் உடனிருப்பில்....
இனியபாரதி.