கல்லூரியில் படிக்கும் போது எனக்கு ஒரு பேராசிரியரை மிகவும் பிடிக்கும். கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது தான் எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்வேன்.. அவருடன் இணைந்து வெளியில் சென்ற தருணங்கள் பல... விடுதியில் சொல்லாமல் கூட, அவருடன் வெளியில் சென்றுள்ளேன்.. அவரது நிச்சயதார்த்தத்திற்குக் கூட நான் சென்றிருந்தேன்.. அன்று இரவு அவருடன் அருகில் இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டது.. அதன் பிறகு நிறைய நாட்கள் விடுதியில் பிராக்ஜெட் பண்ணப் போகிறேன் என்று சொல்லிவிட்டு ஞாயிறானால் அவரது வீட்டிற்குத் தான் செல்வேன்...
இன்று அதை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது.... சிரிப்பாக இருக்கிறது!
இன்று எதேர்ச்சையாக என் அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது... அது யாரென்று எனக்குத் தெரியவில்லை... யாரென்று கேட்டு நானும் அனுப்பியிருந்தேன்.. பதில் உன் கல்லூரிப் பேராசிரியர்..... என்று வந்திருந்தது... அதைப் பார்த்ததும் என்னைச் சுற்றி ஆயிரம் பட்டாம் பூச்சிகள் வட்டமிட்டது போல் இருந்தது..
உடனே அழைத்தேன்.. அழைப்பை எடுக்கவில்லை... சிறிது நேரத்திற்குப் பின் அவரே அழைத்தார்... நான் எடுக்கவில்லை.... மறுபடியும் நான் அழைத்தேன்... அவர் எடுக்கவில்லை... கடைசியாக அவர் அழைத்தார்... எடுத்துப் பேசினேன்... இன்னும் என் மீனுவும்... அவள் குரல் கூட மாறவில்லை... அவளது ஆங்கில உரையாடல்கள் கூட அப்படியே இருந்தது....
பார்க்க வேண்டும் போல் ஆவலாகத் தான் இருக்கிறது... என்று பார்ப்பேனென்றுத் தெரியவில்லை???
இதில்... என் செல்லம்மாவும் என்னுடன் பேசியது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்தது.. இந்த நாள் அப்படியே இருந்துவிடக் கூடாதா என்று எண்ணத் தோன்றுகிறது!
கடந்த நாட்களை நினைத்துப் பார்க்க எனக்கு ஒரு தருணத்தைத் தந்ததற்கு நன்றி இறைவா!
என்னையும் பொருட்படுத்த என் செல்லம்மாவிற்கு நேரம் கொடுத்ததற்கு நன்றி!
இனியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக