வெள்ளி, 30 அக்டோபர், 2015

கண்ணீர்ப்படலம்...

இன்றைய தலைப்பு சற்று வித்தியாசமாக இருந்தாலும், எல்லோரும் அறிந்த ஒன்றைப் பற்றிப் பேசுவதற்கு நிறையவே இருக்கின்றது. கண்ணீரைப் பற்றித் தான் இன்று பேசப் போகிறோம். கண்ணீர் வராத ஆள் இல்லை, என்றே சொல்லலாம். ஒவ்வொருவர் கண்களில் இருந்தும் ஏதாவது ஒரு பருவத்தில் கண்ணீர் வந்திருக்கும்.
சிலருக்கு குழந்தைப் பருவமாக இருந்திருக்கலாம்.
சிலருக்கு இளமைப் பருவமாக இருந்திருக்கலாம்.
சிலருக்கு முதுமைப் பருவமாகக் கூட இருந்திருக்கலாம்.
ஆனால், அனைவரும் கண்ணீரை ருசி பார்த்திருப்போம் தான்.
இந்தக் கண்ணீரில் அவ்வளவு பெரிய வல்லமை என்ன? பெண்கள் அழுதே சாதிப்பவர்கள் என்ற பழமொழி கூட உண்டு. அதன் அர்த்தம் சிறு வயதில் எனக்குப் புரியவில்லை. ஆனால் இன்று என் வாழ்வில் நானே செய்யும் போது
அதை என்னால் உணர முடிகிறது.
கண்ணீர் - சில நேரங்களில் ஆறுதலாகவும்.. சில நேரங்களில் ஆற்றுப்படுத்துவதாகவும்... சில நேரங்களில் மற்றவரை மகிழ்விப்பதாகவும்.. இன்னும் சில நேரங்களில் மற்றவரையும் அழ வைப்பதாகவும் இருக்கிறது. இந்தக் கண்ணீருக்கு இவ்வளவு வல்லமையா என்று ஆச்சரியப்பட்டுத் தான் இன்று இந்தத் தலைப்பைப் பற்றி எழுத முற்பட்டேன்.
கண்ணீர் - அன்பானவரை மயக்கவும் உதவும்
கண்ணீர் - கடவுளின் உள்ளத்தையும் கரைக்கும்
கண்ணீர் - பரிதாபத்தையும் ஏற்படுத்தும்
கண்ணீர் - ஆசையைக் கூடத் தட்டி எழுப்பும்
ஆனால்.. அனைத்தும் நாம் அழுகின்ற சூழலைச் சார்ந்தது.
அழுவது தவறல்ல. ஆனால்.. தேவையில்லாததற்காக தேவையில்லாதவர்களுக்காக அழுவது தான் தவறு. எனக்கு அழுவதென்றாலே பிடிக்காது. யாராவது அழுதால்... அவரைத் திட்டத் தான் செய்வேன். ஆனால்.. அதிகம் அழுபவர் பட்டியலில் முதல் வரிசையில் நான் இருப்பேன்.
யார் முன்பு அழுதும்.. நாம் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை என்பதை சற்றுத் தாமதமாகத் தான் என் வாழ்வில் புரிந்துகொண்டேன்.
'நமக்குள் நாமே அழுது கொள்வது' என்பது தான் இன்றைய காலக்கட்டத்தில் நாம் தள்ளப்பட்டிருக்கிற நிலைமை.
உன் கண்ணீரைச் சிந்துவதற்கு முன்..யாருக்காக? எதற்காக? என்று யோசித்துவிட்டுச் சிந்து.
உன் கண்களில் இருந்து வரும் ஒவ்வொரு துளிக்கும் ஒரு மதிப்பு உண்டு.

வியாழன், 29 அக்டோபர், 2015

இலவசம்...

நம் செந்தமிழ் நாட்டில், வெகு சிலருக்குத் தான் இந்த வார்த்தை பிடிக்காமல் இருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவர்களுக்கு இது ஒரு பரீட்சையப்பட்ட வார்த்தை. 'இலவசம்'... நான் சிறு வயதாய் இருந்த போது, என் மம்மி யாரும் இலவசமாக எது கொடுத்தாலும் வாங்கக் கூடாது எனக்கு வேண்டாம் என்று சொல்லிப் பழக வேண்டும் என்று தான் சொல்லிக் கொடுத்தார்கள். இன்று பேரம் பேசுவதில் தொடங்கி, எது இலவசமாய் கிடைக்கிறதோ அனைத்தையும் வாங்கிக் கொள், என்று தான் இன்றைய அம்மாக்கள் சொல்லி அனுப்புவார்கள் போல.
இலவசம் என்றால் எது கிடைத்தாலும் பரவாயில்லை. கிடைப்பதை பெற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு எண்ணம். ஏனென்றால்.. அதை என் வியர்வை சிந்தி சம்பாதிக்கவில்லையே!!! அல்லது... என் பெற்றோர் எனக்கு ஆசையாய் வாங்கிக் கொடுத்தது கூட இல்லையே... யாரோ ஒருவர் எதற்காகவோ கொடுக்கிறார். என் அம்மா அடிக்கடி சொல்லுவார்.... நமக்கு யாராவது இலவசமாய்  ஏதாவது செய்கிறார் என்றால்.. நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துத் தான் செய்வார் என்று.
அதுவும் அல்லாமல்.. இலவசம் நிலைத்தாலும் பரவாயில்லை... இல்லை அழிந்துவிட்டாலும் பரவாயில்லை. நாம் வருந்துவது இல்லை.
வாரஇதழ்களில் புதிர் வினா விடை தொடங்கி, வெளிநாடு செல்ல ஒரு வாய்ப்பு என நமக்கு வரும் குறுஞ்செய்திகளுக்குப் பதில் அனுப்புவது வரை... எல்லாமே இலவசத்திற்காய்த் தான் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு முறை, அம்மா தொலைக்காட்சியைப் பார்க்கும் போது இந்த இலவசம் என்ற வார்த்தை தான் என் மனதை நெருடிக் கொண்டிருக்கும்.
கொடுப்பவருக்குத் தான் அறிவில்லையைன்றால்... வாங்குபவரும் அடகு வைத்துவிட்டாரா? என்று தான் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
இலவசமாய் பொருள் கொடுப்பதையோ.. இலவசமாய் பெற்றுக் கொள்வதற்கோ ஆசைப்படும் நாம் இலவசமாய் நம்மிடம் கொடுக்க இருப்பதை யாருக்கும் கொடுக்க மாட்டோம்.
நம் நேரம்...
நம் அன்பு...
நம் அரவணைப்பு...
நம் பாசம்...
நம் கரிசனை...
நம் நட்பு...
நம் நல்ல சொற்கள்..
நம் வாழ்த்துகள்...
இப்படிக் கொடுப்பதற்கு இலவசமாய்ப் பல நல்ல காரியங்கள் இருக்கும் போது... அற்ப இலவசப் பொருட்களுக்கு ஏங்காதீர்கள்!!!! மற்றவர்களையும் ஏங்க வைக்காதீர்கள்.



புதன், 28 அக்டோபர், 2015

சண்டை...

இன்றைய என் தலைப்பு வேடிக்கையாக இருந்தாலும்...இதில் சிந்திக்க, நிறைய காரியங்கள் உள்ளன. சண்டை என்றால் இரு நாடுகளுக்கு இடையே நடப்பது, இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடப்பது, இரு மதவாதிகளுக்கு இடையே நடப்பது மட்டுமல்ல... கணவன் மனைவிக்கு இடையே நடப்பது, காதலன் காதலிக்கு இடையே நடப்பது, நண்பர்களுக்கு இடையே நடப்பது,பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நடப்பது, தெருக்களில் நடப்பது.... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
சண்டை போடுவதால் பயன் உண்டா? என்ற ஒரு கேள்வி எழுப்பினால் நம்மில் சிலர்.... சண்டையிடுவதால் தான் என் கணவர் நான் சொல்லும் வேலைகளைச் செய்கிறார் என்று மனைவி சொல்வார்கள்!
சண்டை இல்லாவிட்டால் காதலில் சுவாரசியம் இருக்காது என்று காதலர்கள் சொல்வார்கள்!
சண்டையிடும் போது தான் உண்மையான நண்பனைப் புரிந்து கொள்ள முடியும் என்று கூட நண்பர்கள் கூறுவார்கள்.
பக்கத்து வீட்டுக்காரருடன் ஏதாவது சண்டையிட்டால் தான், அவன் என்னிடம் எதுவும் கேட்டுவர மாட்டான் என்பதற்காகக் கூட சிலர் சண்டையிடுவார்கள்.
இப்படி சண்டையிடுவதற்குப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
நான் அடிக்கடி காணும் சண்டை...
குடித்துவிட்டு நடுரோட்டில், தன் மனைவியைத் தகாத வார்த்தைகளில் பேசும் கணவன்...
பணத்திற்காகத் தன் கணவனுடன் சண்டையிடும் மனைவி...
பெருமை தேடிக் கொள்ள வேண்டுமென்பதற்காகத் தன் நண்பர்களைப் பகைத்துக் கொள்கிறவர்கள்..
செல்வத்தைத் தேடிக் கண்டடைய ஒரு சண்டை...
இன்னும் சிலர்...
யாராவது சந்தோஷமாக இருந்துவிட்டால் போதும்..
அவர்கள் அமைதியைக் கெடுப்பதற்காகவே சண்டையிடுவார்கள்.
'சண்டை' – "sun” + “die” – காலையில் சண்டை போட்டிருந்தால், அந்த நாள் இரவு முடிவதற்குள் உன் சண்டையைத் தீர்த்து, சமரசம் செய்து கொள். நேற்று, சில நாடுகளில் நிலநடுக்கம் என்று செய்தியில் வாசித்தேன். மாலை, பள்ளி முடிந்து வரும் போது, திடீரென இந்த வரிகள் மட்டும் என் ஞாபகத்திற்கு வந்தது.... 'பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்னு போகும் ஆட்டமே'.
இதற்கும் இன்றைய தலைப்பிற்கும் சம்பந்தம் இருக்கிறது. சண்டையிடுவதால் பலன் என்றால் தவறில்லை. ஆனால்... அதையும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்காதே. உன் உறவை முறித்துக் கொள்வதற்கும் பின் தயங்க மாட்டார்கள்.
உன் உற்றவர்களிடம் சண்டை போடு. ஆனால் சமரசம் செய்து கொள், அடுத்த நாள் விடிவதற்குள்...
சண்டையால் உடல் நலனையும் உள்ள சுகத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்!!!!
அறிவுரை அல்ல... கட்டளை.
'பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்னு போகும் ஆட்டமே'.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

மெய்யான இன்பம்...

என் 2014 ஆம் ஆண்டு டைரியைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அதில், என் கண்ணில் பட்ட வரி ' Joy comes from giving'. சரி. அதை வைத்தே, இன்றைய வலைப்பூவை அலங்கரிக்கலாம் என்று நினைத்தேன். வெகு நாட்களுக்குப் பின் இன்று தான் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எழுதுவதிலும் படிப்பதிலும் உள்ள சுகம் எதிலும் கிடையாது.
நாவல் படித்து விட்டுத் தன் அன்பர்களிடம் சண்டையிடும் சில அசடுகளும் உண்டு. நாவல் மிகவும் அருமையாக இருந்தது என்று, அதைப் பற்றி மற்றவரிடம் பகிர்ந்து கொள்பவர்களும் வெகுசிலரே. ஆனால், எனக்கு ஒரு கெட்ட பழக்கம். எந்த ஒரு நாவல் படித்தாலும் நோட்ஸ் எடுப்பது. எடுத்தபின் அதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வது. என் சில கிறுக்கல்கள் கூட அவைகளாகத் தான் இருக்கும்.
நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகம் '“I too had a love story'. நன்றாக இருந்தது என்றும் சொல்ல முடியாது. நல்லாவே இல்லை என்றும் சொல்ல முடியாது. படிக்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது. அடுத்து என்ன என்று யோசிக்க வைக்கும். மூன்றே இரவுகளில் படித்து முடித்தேன். இந்தப் புத்தகம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு புத்தகமாக அமையும். ஏற்கெனவே எனக்கு ஒரு கதைப் புத்தகம் எழுத வேண்டுமென்று வெகுநாட்களாக ஆசை இருந்தது. இப்புத்தகத்தைப் படித்தவுடன் அது மேலும் அதிகரித்துவிட்டது. என் கதை எழுதும் திறமையை என் வலைப்பூவில்இ சில பதிப்புகளைக் கொடுத்துத் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவு அரை மணி நேரமாவது செலவிட வேண்டுமென்று நினைத்துள்ளேன். கடைப்பிடிக்க வேண்டும்.
சரி. நம் அழகிய மேற்கோளுக்கு வருவோம். அழகிய தமிழில் சொல்ல வேண்டுமென்றால்.... ' கொடுப்பதில் தான் உண்மையான இன்பம்' என்பது தான். கொடுப்பது? எதைக் கொடுப்பது? இன்றைய காலத்து இளைஞர்களிடமும் வில்லங்கம் பிடித்த குழந்தைகளிடமும் இந்தக் கேள்வியை மட்டும் கேட்டுவிடக் கூடாது. பின் நாம் தான் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
பெரும்பாலும் நான் உரையாட விரும்புவது... திருமணம் ஆனவர்களிடமும் பெரியவர்களிடமும் தான். அவர்கள் தான் தங்கள் வாழ்க்கை அனுபவங்கள் மூலம் விளக்குவார்கள்.
கொடுப்பது...
அன்பைக் கொடுப்பது...
அரவணைப்பைக் கொடுப்பது...
பாசத்தைக் கொடுப்பது,...
பக்குவத்தைக் கற்றுக் கொடுப்பது...
ஆசை முத்தம் கொடுப்பது...
ஆதரவைக் கொடுப்பது...
பகிர்ந்து கொடுப்பது...
நேரத்தைக் கொடுப்பது...
இப்படி கொடுப்பதில் சில நல்லவைகளும் இருக்கின்றன. சில தீயவைகளும் இருக்கின்றன. நாம் இன்று நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
ஒவ்வொரு நாள் இரவு தூங்கப் போவதற்கு முன் இரண்டு நிமிடங்கள் மௌனமாக... இன்று நான் எதை மற்றவருக்குக் கொடுத்தேன் என்று சிந்திப்போம். நான் கொடுத்ததில் ஏதாவது இரண்டாவது நேர்மறையானவையாக இருக்கின்றனவா? என்று சிந்தித்துப் பார்ப்போம். இல்லையைன்றால்... அவற்றை நேர்மறையாக்க நாளையாவது முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தூங்கச் செல்வோம். என்றாவது ஒரு நாள் நாம் கொடுக்கும் அனைத்தும் நேர்மறையானவையாக மாறிவிடும்.
கொடுப்பதற்கு பணக்காரராக இருக்க வேண்டுமென்றெல்லாம் அவசியமில்லை. என்னிடம் கொடுக்க என்ன இருக்கிறது என்பதை முதலில் திட்டமிடுங்கள். அடுத்து... அதை யாருக்குக் கொடுக்க வேண்டுமென்று முடிவெடுங்கள். அதன் பிறகு செயல்படுங்கள். கண்டிப்பாக... கொடுப்பதில் இன்பம் அடைவீர்கள்!

வெள்ளி, 16 அக்டோபர், 2015

A Little Book of Life – Ruskin Bond


















Quotes I like the most in Ruskin Bond’s book “A Little Book of Life

      1.  Believe in yourself… Soon others will believe in you too...
      2.   Never tell an unnecessary lie.  The truth has great authority. – P. D. James
      3.   Let no man take your dream away. It will sustain you to the end
      4.   Don’t give up. Once success will erase many failures.
      5.   The difficult can be done immediately; the impossible takes a little longer.
      6.   Now and then there comes a time in our affairs when courage is safer than prudence.
      7.   When it pays better to talk than to listen, change your company.
      8.   Most men want their children to be a credit to them.  Wise men try to be a credit to their children
      9.   There are no fresh starts in life. But there are new directions.
      10.   Everything that depends on others gives pain, everything that depends on our self gives pleasure. – Mann
      11.   Bad times are good times to prepare for better times
      12.   Follow instinct rather than intelligence, and it may result in a modicum of happiness
      13.   I’ve seen more tears run down the pretty faces than the plain ones – Evelyn Nesbit