மிக அருகிருந்து இரசிப்பது ஒரு அழகு தான்...
தொட்டு இரசிப்பது ஒரு அழகு என்றால்,
தொடாமல் இரசிப்பது ஒரு அழகு தான்...
வார்த்தைகளால் வருணிப்பது ஒரு அழகு என்றால்,
மெளனமாய் பார்த்துக் கொண்டே இருக்க வைப்பதும் ஒரு அழகு தான்...
இனியபாரதி.
கருத்து எங்கு வேண்டுமானாலும் சொல்லப்படலாம்... காதல் எங்கு வேண்டுமானாலும் உணரப்படலாம்... எல்லாம் அதை அனுபவிப்பவர் தகுதியைப் பொறுத்து....
அவளின் அழகு கன்னக் குழிகளும்
கண் இமைகளும் மட்டும் தான் அழகென்று நினைத்தேன்...
அவளின் சின்னஞ்சிறு செயல்கள் கூட...
என்னை மெய்சிலிர்க்கச் செய்யும் தருணங்கள்...
என் வாழ்வின் இனிமையை இன்னும் கூட்டுகின்றன...
இனியபாரதி.