ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

மகாகவி...

இன்று செல்லம்மாவின் கணவர், பாரதியின் இறந்த நாள்.. அதாவது, நமது நாட்டுப் பெண்களைப் பற்றிப் புரட்சிப்பாட்டு பாடிய அதே மகாகவி பாரதியின் இறந்த நாள்.. பாரதியை எந்த அளவு நான் போற்றுகிறேனோ, அதே அளவிற்குச் செல்லம்மாவையும் எப்போதும் நினைத்துப் பார்ப்பேன்... என் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்தவள் இந்தச் செல்லம்மா...

கணவனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதவளாக... தன் கணவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்தவளாக... அன்பானவளாக... இப்படி எந்தக் கோணங்களில் பார்த்தாலும் செல்லம்மா ஒரு அழகி.

நம் நண்பர்கள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாலே அந்தச் சோகத்தை மறக்க மாதங்கள் ஆகின்றன... தன் கணவன் இறந்துவிட்ட சோகத்தை அவள் எப்படித் தாங்கியிருந்திருப்பாள்? அதுவும் உதவுவதற்கு ஆட்களே இல்லை... பாரதி படம் பார்த்த அந்த நாள்... என்னுள் எழுந்த எண்ணம்.. 'பாரதிக்கு வந்த இந்த நிலை, என் எதிரிக்குக் கூட வரக்கூடாதென்று!...' இன்னும் பாரதியின் அந்த இறப்புக் காட்சி என் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது...

இந்தக் காலத்தில் பணக்காரப்பையன்களை மட்டுமே பார்த்து காதலித்துக் கரம்பிடிக்கிறார்கள் பெண்கள்.. செல்லம்மா, அறியாத வயதில், கணவன் என்ற பெயரில், பாரதியை மணந்து கடைசி வரை அவருக்காகவே அவருடன் வாழ்ந்தவள்.. இன்றைய தினம் செல்லம்மாவையும் சிறப்பாக எண்ணிப் பார்க்கிறேன்..

என் பாரதியின் செல்லம்மா... போற்றுதற்குரியவள்...

என் பாரதி... என்றும் நினைவில் நிற்பவர்....

சனி, 10 செப்டம்பர், 2016

ஆசிரியர் என்பவர் யார்?

கோமுகி பதிப்பகத்தால் வெளியிடப்படும் மாத இதழ் 'கல்வி'. இந்த இதழில் நிறைய அரிய தகவல்கள் கொடுக்கப்படும். அனைத்தும் அருமையாக இருக்கும்.

இந்த மாதம் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டதால், ஆசிரியர் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை விளக்கி ஒரு ஆங்கில விமர்சனம் தரப்பட்டிருந்தது. அதை வாசிக்கும் போது, என் நண்பர்களிடம் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது...

இதோ அந்த வரிகள்…

A Teacher takes Responsibility for your growth.
A Guru makes you Responsible for your growth.

A Teacher gives you things you do not have and require.
A Guru takes away things you have and do not require.

A Teacher answers your questions.
A Guru questions your answers.

A Teacher requires obedience and discipline from the students.
A Guru requires trust and humility from the students.

A Teacher clothes you and prepares you for outer journey.
A Guru strips you naked and prepares you for inner journey.

A Teacher is a guide on the path.
A Guru is a pointer to the way.

A Teacher sends you on the road to success.
A Guru sends you on the road to freedom.

A Teacher explains the world and its nature to you.
A Guru explains yourself and your nature to you.

A Teacher gives you knowledge and boosts your ego.
A Guru takes away your knowledge and punctures your ego.

A Teacher instructs you.
A Guru constructs you.

A Teacher sharpens your mind.
A Guru opens your mind.

A Teacher reaches your mind.
A Guru touches your spirit.

A Teacher instructs you on how to solve problems.
A Guru shows you how to resolve issues.

A Teacher is a systematic thinker.
A Guru is a lateral thinker.

A Teacher leads you by hand.
A Guru leads you by examples.

One can find a teacher.
A Guru had to find and accept you.

When the teacher finishes with, you celebrates.
When a Guru finishes with, your life celebrates.

நான் நல்ல ஆசிரியரா? இல்லை.... குருவா?
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இதே போல், செப்டம்பர் மாத இதழில் வெளிவந்த 'காட்டு மரத்தின் கண்ணீர்' என்ற கவிதை என்னை மிகவும் தொட்டது. வாசிக்கும் போதே ஆர்வத்தைத் தூண்டியது. நேரம் கிடைப்பவர்கள் இணைய தளத்திலும் இந்த இதழைப் படித்து மகிழலாம்.
www.komugikalvi.com

புதன், 7 செப்டம்பர், 2016

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!


அன்புள்ள தோழிக்கு....
இன்று உன் பிறந்த நாள்...
பிறந்த நாள் வாழ்த்துகள் என்று ஒரு வரியில் கூறிவிட
மனம் வரவில்லை...
உனக்காக ஒருசில வரிகள்....
பொறுமைக்கு இலக்கணமாய்...
கருணையில் கருவாய்....
புன்முறுவலின் பூங்கொத்தாய்....
தலையசைக்கும் தலையாட்டி பொம்மையாய்...
தோள் கொடுக்கும் தோழியாய்...
கரடுமுரடான பாதையில் வழிகாட்டியாய்...
பாசத்தைப் பொழியும் அன்பு மகளாய்...
அரவணைக்கும் அன்னையாய்...
பகிர்ந்து கொள்ளும் பண்புடையவாய்...
என்று
எப்படி உன்னால் மட்டும் இத்தனை
குணங்களையும்
ஒருங்கே கொண்டிருக்க முடிகிறது?
உன்னைப் பார்த்துப்
பொறாமைப்படுகிறேன்...
உன் பொறுமை குணம்
எனக்கும்
வேண்டுமென்று...
கவிமா....
நீ ஒரு கவிதை.....
என் கவித்தலைவன் பாரதியின் பட்டப்பெயரையே பெயராகச் சூட்டிக் கொண்ட நீ.....
என் பாரதியைப் போன்று....
அவன் புகழைப் போன்று....
பல்லாண்டு...
எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ....
உன் அன்புத் தோழியின்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!!!

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இதை மட்டுமாவது செய்வேன்...

நான் உன்னை அன்பு செய்கிறேன்... என்று
நூற்றுக்கு முந்நூறு முறை கூறுவது மட்டும்
அன்பல்ல...

ஒருவர் மீது நமக்குள்ள அன்பைக் காட்ட
பல வழிகள் உள்ளன..

இப்படி ஏதாவது ஒரு விதத்தில் நமதன்பை
மற்றவர்க்கு உணர்த்தலாம்...

அன்பு செய்வதாக மட்டும் ஒருவரை ஏமாற்றுவது

உலகிலுள்ள பாவங்களில்
மிகக் கொடுமையானது!!!

உனக்குப் பிடித்தால் பிடிக்கிறதென்று தைரியமாகச் சொல்!

உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அதையும் தைரியமாகச் சொல்லிப்பார்!!

கண்டிப்பாக நீ ஏற்றுக் கொள்ளப்படுவாய்!!!

அன்பைத் தானமாகப் பெறாதீர்!
அன்பைத் தானமாகத் தராதீர்!

அன்புடன் இனியா.