கண்டும் காணாதது போன்று...
பார்வையிலே பரிமாறிக் கொண்டு...
எதிலும் ஈடுபாடு இல்லாதது போல்...
தன் பணியை மட்டும் செய்து...
அக்கறை இல்லாமல்...
அழகுபடுத்தாமல்....
அடிக்கடி பார்க்க வேண்டி...
அஞ்சா நெஞ்சத்துடன்...
அறநெறி முறையில்...
அதீத ஆர்வம் கொண்டு...
ஏக்கம் மட்டும் மிஞ்சிப் போக...
ஏழு நாட்களும் ஏழு யுகங்களாய்...
திரும்பும் திசையும் அறியா மனது...
திக்குமுக்காடிப் போன பின்பு...
காரணமும் கருப்பொருளுமாகி...
கடிந்து கொள்ள மனம் இல்லை....
கருத்து சொல்ல வார்த்தை இல்லை...
திங்கள் அன்று திணறிய தருணம்...
தீங்கு செய்ய விரையா மனம்...
எப்பொருளும் ஆசை இல்லை...
என்றும் அருகில் மட்டும்...
ஒன்றாகி ஓய்வு கொள்ள முடியா
"ஊமை அன்பு"
இனியபாரதி.