இந்த நோயை மட்டும்
தேடிப் பெற்றுக் கொள்ள ஆசை!
நான் வேண்டாமென்று ஓடினாலும்
என்னை விட்டுச் சென்று விடாதே!
நீ என்னைவிட்டுப் போக
நான் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ள மாட்டேன்!
என்னை நோயின் உச்சத்திற்கு
எடுத்துக் கொண்டு போ!
அப்போது தான் உன்னைப் பற்றி
நன்கு அறிந்து கொள்ள முடியும்!
நீ வேண்டாமென்று ஒதுக்கியவர்களிடமிருந்து
என்னிடம் வந்துவிடு!
உன்னை வரவேற்க என் மனக்கதவு
என்றும் திறந்திருக்கும்!
நீ தாக்கிய மனிதர்களிடம் தான்
அதிகம் பழக மனம் துடிக்கிறது!
அவர்களிடம் நீ இருப்பதாலேயே
அவர்களை விரும்பவும் செய்கிறேன்!
நீ இருப்பதாலேயே ஒருவரை
விரும்புகிறேன்
என்றால்
உன்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்று பார்!
நீ என்னைக் கண்டுகொள்ளாத போதும்
நீயே எனக்கு வேண்டும் என்று
உனக்காய்
வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்!
என்னை ஏமாற்றாமல் என்னிடம் வந்துவிடு!
நீ என்னுடன் இருந்தால் போதும்!
எல்லாம் என்வசம் தான்!
என்றும் உனக்காய் ஏங்கித் தவிக்கும்
என்னைக் கண்டு கொள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக