புதன், 9 ஏப்ரல், 2014

பரவசம்!!!


பரவசம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பார்த்தாலே பரவசம் படம் தான் உடனே ஞாபகத்திற்கு வரும். அந்தப்படத்தில் நாயகனும், நாயகியும் பார்வையாலேயே பேசிக்கொள்வார்கள்.  இதனால் தான் படத்தின் தலைப்பு, "பார்த்தாலே பரவசம்".
சிலருக்கு சிலரது குரலைக் கேட்டால் பரவசம். 
சிலருக்கு மழையில் நனைந்தால் பரவசம்.
சிலருக்கு ரயிலில் பயணம் செய்தால் பரவசம்.
சிலருக்கு சன்னல் ஓரம் பரவசம்.
சிலருக்கு காலைத் தூக்கம் பரவசம்.
சிலருக்கு மாலை நடைப்பயிற்சி பரவசம்.
சிலருக்கு வானவில் பரவசம்.
சிலருக்கு பாடும் போது பரவசம்.
சிலருக்கு ஆடும் போது பரவசம்.
சிலருக்கு சிரிக்கும் போது பரவசம்.
சிலருக்கு காதலி/காதலனைப் பார்க்கும் போது பரவசம்.
சிலருக்கு பிரிந்து சென்ற மகனை/மகளைப் பார்க்கும் போது பரவசம்.
சிலருக்கு இரவில் நிலவைப் பார்த்தால் பரவசம்.
சிலருக்குப் பணத்தைப் பார்த்தால் பரவசம்.
சிலருக்கு நகைகளைப் பார்த்தால் பரவசம்.
சிலருக்குப் பாடல் கேட்டால் பரவசம்.
சிலருக்கு பாடம் படித்து முடித்ததில் பரவசம்.
சிலருக்குத் தேர்வு முடிந்ததில் பரவசம்.
சிலருக்குத் தோழனை/தோழியை நீண்ட நாள் கழித்து சந்தித்ததில் பரவசம்.
சிலருக்குப் புத்தகம் வாங்குவதில் பரவசம்.
சிலருக்கு காதலைச் சொல்லி விட்டதில் பரவசம். 
சிலருக்கு நடிகர்/நடிகையைப் பார்த்தால் பரவசம்.
சிலருக்கு வேலை கிடைத்ததில் பரவசம்.
சிலருக்கு வெளிநாடு சென்றால் பரவசம்.
சிலருக்கு உணவைப் பார்த்தால் பரவசம்.
சிலருக்கு மழையைப் பார்த்தால் பரவசம்.
சிலருக்கு சுற்றுலா சென்றால் பரவசம்.
சிலருக்கு பொம்மை வாங்குவதில் பரவசம்.
பரவசம் பலவிதம்....
நானும் பரவசப்பட்டேன், 'தெருவில் விற்ற கோழிக்குஞ்சுகளில் இரண்டை வாங்கி என் கைகளில் ஏந்திக் கொண்டு நடந்தபோது...'
நீங்கள் எப்போது பரவசப்பட்டீர்கள்?
பகிரவும்...